- ரதி தேவி
அனைத்து வகையான துவையல்களிலும் நார்ச்சத்து மிகுந்த மிகவும் தற்போது அரிதாகவே சாப்பிடும் துவையல் பற்றி தான் பார்க்க போகிறோம்....
ஆம்...
நார்ச்சத்து மிகுந்த துவையல் பனங்கிழங்கு துவையல்...
என்னடா புதுசா என்று நினைக்க தோன்றும்....
புதுசு இல்ல....பழசு ...பாமர மக்களின் பழமையான சத்தான துவையல்.......
பனைமரம் நமது மாநிலத்தின் மாநில மரம்.... அதில் இருந்து பெறப்படும் அனைத்தும் பயனுள்ளதே.....
ஆம் அந்த வகையில் பனங்கிழங்கு துவையல் மற்றும் பனங்கிழங்கு பொடி ....
பனம் பழங்களை விதைத்து பனங்கிழங்கு பெறுவர்...... அந்த பனங்கிழங்கை பெரிய பானையில் அவித்து..... அதை உரித்து... சிறிய சிறிய துண்டுகளாக ஒடிச்சி... ஒடிக்கும் போதே அதன் நார்களை நன்றாக நீக்குவர்... அதை வெயிலில் நல்ல காயவைத்து சாக்கில் போட்டு பாதுகாப்பர்....
சிறிய வயதில் மழைக்காலங்களில் அதுதான் ஸ்னாக்ஸ் எங்களுக்கு.... அதை கடித்து சாப்பிட்டாலே பல் ஸ்ட்ராங்.........
அப்படி காயவைத்த கிழங்கு துண்டுகளைத் தான் மழைக்காலங்களில் துவையல் அரைத்து சாப்பிடலாம்.....
துவையல் நாம் செய்வது தான்..... ஆனால் அம்மியில் அரைத்து சாப்பிட்டாலே தனி ருசி தான்........

தேவையானவை ..
1. காயவைத்த பனங்கிழங்கு
2. காய்ந்த மிளகாய் வற்றல்
3. பூண்டு
4. விருப்பம் இருந்தால் புளி
5. உப்பு
தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்து கொள்ளலாம்.....
முதலில் பனங்கிழங்கை நல்ல அம்மியில் வைத்து பொடி ஆக்கி ... பிறகு தேவையான பொருட்களை சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவும்.....
நன்கு அரைப் பட்டவுடன் தேவைப்பட்டால் தாளித்து கொள்ளலாம்......
சத்தான சுவையான பனங்கிழங்கு துவையல் ரெடி....
பனங்கிழங்கு சீசன் இல்லாத சமயங்களிலும் காய வைத்த பனங்கிழங்கை நாம் பயன்படுத்தலாம்.....
இது போன்று உரலில் இடித்து பொடி செய்தும் சாப்பிடலாம்...... பல் விழுந்த பாட்டிமார்கள் பனங்கிழங்கை பொடி செய்து சாப்பிடுவர்....
Old is Gold ...
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}