சுவையான கன்னியாகுமரி ஸ்டைல் சிக்கன்‌‌ பிரியாணி!

Feb 09, 2026,10:46 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


பல ஊர்களிலும் பிரபலமாக இருப்பது சிக்கன் பிரியாணி. அதற்கு அடிமையானவர்கள்தான் அதிகம். சுவைக்கு அடிமை ஆகாதாவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட பிரியாணி ஒவ்வொரு ஊரிலும் ஒரு சுவையுடன் வலம் வருகிறது.


இது கன்னியாகுமரி ஸ்டைல் பிரியாணி. செய்து பாருங்க.. அசந்து போய்ருவீங்க.


தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம் -1 /2கி

தக்காளி -1/2கி

பட்டை சோம்பு பாக்கெட்-1

கசகசா, சோம்பு, சீரகம் -தலா 1 டீஸ்பூன் 

புதினா-1 கட்டு 

கொத்தமல்லி கறிவேப்பிலை- தேவையான அளவு 

காய்ந்த மிளகாய்-2

பச்சை மிளகாய்-4

சிக்கன்-1/2கி

பிரியாணி அரிசி -1/2கி

தயிர் -1 கப்

தேங்காய் -1/2 முடி

முந்திரி _10

இஞ்சி பூண்டு-தேவையான அளவு


செய்முறை 




ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் சிறிதளவு நெய் ஊற்றிவிட்டு பட்டை சோம்பு வாசனைப் பொருட்கள் சேர்த்துக் கொள்ளவும் ... அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் சிறிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும் .அதன் பிறகு புதினாவையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும் .


பின்னர் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதில் சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு வெந்த பிறகு அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்துக் கொள்ளலாம். அரை கப் தயிரை அதில்  சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பின்னர் ஒரு ஸ்பூன் மல்லித்தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து விட்டு ...ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து நன்கு பவுடர் செய்து அதையும் அதில் சேர்த்துக் கொள்ளவும் பின்னர் சிறிதளவு குழம்பு மிளகாய் தூளையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும். 


அதில் ஊற வைத்திருக்கும் பிரியாணி அரிசியை  சேர்த்து  அதனுடன் அரை மூடி தேங்காயை அரைத்து தேங்காய் பாலையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிம்மில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும் .விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து விசில் அடங்கியவுடன் மூடியை திறக்கவும்.


அதில் அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அரைத்த முந்திரி விழுது,இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி மீண்டும் மூடி வைக்கவும்.   ஐந்து நிமிடங்கள் கழித்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி அதில் தூவி பரிமாறினால் சுவையான கமகமக்கும் சிக்கன் பிரியாணி ரெடி.(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்