கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

Dec 06, 2025,03:38 PM IST

- கலைவாணி கோபால் 


கீரை என்று சொன்னாலே ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடுவார்கள் இன்றைய தலைமுறை குழந்தைகள். அவர்களும் விரும்பி உண்ணும் அளவிற்கு  கீரையை வித்தியாசமாக செய்து தரலாம். எப்படி என்று பார்ப்போமா.


நாம் எந்த கீரையை பயன்படுத்துகிறோமோ அந்த கீரையை அலசி நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, சீரகம், பெருங்காயப்பொடி இடித்து வைத்த எட்டு பல் பூண்டி சேர்க்கவும்.


கடுகு பொரிந்து பூண்டு வதங்கியதும், நீல வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கோல்டன் பிரவுன் அளவிற்கு நன்கு வதக்கவும், வதங்கியதும் அதில் தேவையான அளவு தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.




பின்பு அதனுடன் சிறிது மஞ்சள் பொடி , தேவையான அளவு காரப்பொடி போட்டு உப்பு போட்டு நன்கு கிளறவும். நன்கு வதங்கி எண்ணெய் மேலே பிரிந்ததும், சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை போட்டு ஒரு ஒரு சேர வெந்து வதங்கியுடன், நாம் வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து கிளறி லஞ்ச் பாக்ஸ் இல் தர, 100% குழந்தைகள் மிச்சம் இல்லாமல் சாப்பிட்டு வருவார்கள் 


அதற்கு சைட் டிஷ் ஆக அப்பளமோ அல்லது சிறிய வத்தலோ கொடுத்து விடலாம்.


என்ன மம்மீஸ்.. மண்டே இதை டிரை பண்ணிப் பாருங்களேன்!


(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்