பிரக்யாராஜ்: மனைவிக்கு 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தால், அவருடன் கணவன் கட்டாய உறவு வைத்துக் கொண்டால் அதை குற்றம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இந்த உத்தரவு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
ஒரு பெண்ணுக்கு திருமணமானாலும் கூட அவருக்கு வயது 15 முதல் 18க்குள் இருந்தால், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரத்துக்கு சமம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக அலகாபாத் ஹைகோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஷ்ரா இந்தத் தீர்ப்பை அளித்துள்ளா். தனது மனைவியுடன் இயற்கைக்குப் புறம்பான வகையில் உறவு கொண்டதாக ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார் கணவர்.

இதை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஷ்ரா பெஞ்ச் அளித்த தீர்ப்பின்போது இந்த வழக்கைப் பொறுத்தவரை மனைவியின் வயது 18க்கு மேற்பட்டதாக உள்ளது. இதை பாலியல் பலாத்காரம் என்று கருத முடியாது. இயற்கைக்குப் புறம்பானதாகவும் இதை எடுத்துக் கொள்ள முடியாது. இதை வலுக்கட்டாயமான உறவாகவும் கருத முடியாது என்று கூறி கணவர் மீது போடப்பட்ட 377வது பிரிவு வழக்கை நீக்கி உத்தரவிட்டார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}