பிரக்யாராஜ்: மனைவிக்கு 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தால், அவருடன் கணவன் கட்டாய உறவு வைத்துக் கொண்டால் அதை குற்றம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இந்த உத்தரவு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
ஒரு பெண்ணுக்கு திருமணமானாலும் கூட அவருக்கு வயது 15 முதல் 18க்குள் இருந்தால், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரத்துக்கு சமம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக அலகாபாத் ஹைகோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஷ்ரா இந்தத் தீர்ப்பை அளித்துள்ளா். தனது மனைவியுடன் இயற்கைக்குப் புறம்பான வகையில் உறவு கொண்டதாக ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார் கணவர்.
இதை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஷ்ரா பெஞ்ச் அளித்த தீர்ப்பின்போது இந்த வழக்கைப் பொறுத்தவரை மனைவியின் வயது 18க்கு மேற்பட்டதாக உள்ளது. இதை பாலியல் பலாத்காரம் என்று கருத முடியாது. இயற்கைக்குப் புறம்பானதாகவும் இதை எடுத்துக் கொள்ள முடியாது. இதை வலுக்கட்டாயமான உறவாகவும் கருத முடியாது என்று கூறி கணவர் மீது போடப்பட்ட 377வது பிரிவு வழக்கை நீக்கி உத்தரவிட்டார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}