- வே.ஜெயந்தி
என் வலிமை
எடைகளைத் தூக்கும் கைகளில் இல்லை,
தோல்விக்குப் பின்
மீண்டும் எழுந்த
என் மனதில்தான் பிறந்தது.
என் வலிமை
மனச்சாட்சியின் ஆழத்தில் உறைகிறது,
அதுவே எனக்கு
நம்பிக்கையுடன்
நேராக நடக்க வழிகாட்டுகிறது.

“உன் வலிமை என்ன?” என்று
யாராவது கேட்டால்,
நான் அமைதியாகச் சொல்வேன்
வாழ்க்கை சோதித்தபோதெல்லாம்
நான் எழுந்து நிற்கக் கற்றுக்கொண்டேன்.
ஏற்றத் தாழ்வுகளோடு பயணிக்கத் தெரியும்,
நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்
ஏனெனில்
என் வலிமை
நானே.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
{{comments.comment}}