சென்னை: பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே. அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம் என்று மகளிர் தினத்தில் திமுகவை நேரடியாக தாக்கிப்பேசியுள்ளார் தவெக கட்சி தலைவர் விஜய்.
இன்று உலகம் முழுவதிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நேற்றில் இருந்தே தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டிற்கு முன்னர் கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய் இன்று தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வழக்கமாக எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பதிவாக வெளியிட்டு வந்த விஜய் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
.jpg)
மகளிர் தின வாழ்த்துக்களுடன், இதுவரைக்கு எந்த கட்சியின் பெயரையும் நேரடியாக சொல்லி விமர்சிக்காத விஜய் இன்று நேரடியாக திமுக கட்சியின் பெயரை சொல்லி தாக்கிப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.
இந்நிலையில், மகளிர் தினம் குறித்து விஜய் வெளிட்ட விடியோவில், எல்லோருக்கும் வணக்கம் இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று நினைத்து உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். உங்களுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். சந்தோசம் தானே. பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே.
அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம். எல்லாமே இங்க மாறக்கூடியது தானே. மாற்றத்துக்கு உரியதுதானே. கவலைப்படாதீங்க. இந்த 2026 ஆம் ஆண்டு நீங்க நான் எல்லாரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவை மாற்றவும், அதற்கு மகளிர் தினம் ஆனா இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். உங்களுடைய எல்லா சூழ்நிலையிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தந்தையாக, தோழனாக நான் உங்களுடன் நிற்பேன். நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}