சென்னை: பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே. அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம் என்று மகளிர் தினத்தில் திமுகவை நேரடியாக தாக்கிப்பேசியுள்ளார் தவெக கட்சி தலைவர் விஜய்.
இன்று உலகம் முழுவதிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நேற்றில் இருந்தே தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டிற்கு முன்னர் கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய் இன்று தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வழக்கமாக எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பதிவாக வெளியிட்டு வந்த விஜய் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மகளிர் தின வாழ்த்துக்களுடன், இதுவரைக்கு எந்த கட்சியின் பெயரையும் நேரடியாக சொல்லி விமர்சிக்காத விஜய் இன்று நேரடியாக திமுக கட்சியின் பெயரை சொல்லி தாக்கிப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.
இந்நிலையில், மகளிர் தினம் குறித்து விஜய் வெளிட்ட விடியோவில், எல்லோருக்கும் வணக்கம் இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று நினைத்து உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். உங்களுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். சந்தோசம் தானே. பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே.
அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம். எல்லாமே இங்க மாறக்கூடியது தானே. மாற்றத்துக்கு உரியதுதானே. கவலைப்படாதீங்க. இந்த 2026 ஆம் ஆண்டு நீங்க நான் எல்லாரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவை மாற்றவும், அதற்கு மகளிர் தினம் ஆனா இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். உங்களுடைய எல்லா சூழ்நிலையிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தந்தையாக, தோழனாக நான் உங்களுடன் நிற்பேன். நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}