ICC Champions Trophy 2025.. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயில்.. பாக்.குடன் எப்போது மோதல்?

Dec 24, 2024,06:06 PM IST

டெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்துமே துபாயில் நடைபெறவுள்ளன.


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்குப் போய் விளையாட முடியாது என்று மறுத்து விட்டதால் தற்போது இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி போடடிகள் நடைபெறவுள்ளன.


19 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கும். மார்ச் 9ம் தேதி லாகூரில் இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மொத்தம் எட்டு அணிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளன. இவற்றுக்கு இடையே 15 போட்டிகள் நடைபெறவுள்ளன.  பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர், கராச்சியில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மைதானத்திலும் தலா 3 குரூப் போட்டிகள் நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டியும் லாகூரில் நடைபெறும். ஒரு வேளை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் அரை இறுதிப் போட்டி மற்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன.  முதல் போட்டியில் பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானும், நியூசிலாந்தும் கராச்சியில் மோதவுள்ளன.  அனைத்துப் போட்டிகளும் பகல் இரவுப் போட்டியாக நடைபெறும்.




அணிகள் விவரம்:


ஏ பிரிவு- இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம்

பி பிரிவு - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து


போட்டி அட்டவணை:


பிப்ரவரி 19 - பாகிஸ்தான் - நியூசிலாந்து (கராச்சி)

பிப்ரவரி 20 - இந்தியா - வங்கதேசம் (துபாய்)

பிப்ரவரி 21 - பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா (கராச்சி)

பிப்ரவரி 22 - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (லாகூர்)

பிப்ரவரி 23 - இந்தியா - பாகிஸ்தான் (துபாய்)

பிப்ரவரி 24 - வங்கதேசம் - நியூசிலாந்து (ராவல்பிண்டி)

பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி)

பிப்ரவரி 26 - ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து (லாகூர்)

பிப்ரவரி 27 - பாகிஸ்தான் - வங்கதேசம் (ராவல்பிண்டி)

பிப்ரவரி 28 - ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (லாகூர்)

மார்ச் 1 - தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து (கராச்சி)

மார்ச் 2 - இந்தியா - நியூசிலாந்து (துபாய்)

மார்ச் 4 - முதல் அரை இறுதி (துபாய்)

மார்ச் 5 - 2வது அரை இறுதி (லாகூர்)

மார்ச் 9 - இறுதிப் போட்டி (லாகூர் அல்லது துபாய்)

மார்ச் 10 - ரிசர்வ் தினம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிளாக் டீ Vs க்ரீன் டீ... ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?

news

ஈஸியா கோலம் போடனும்னா இதை பண்ணுங்க.. சரோஜாதேவி காலத்து டிப்ஸ்தான்.. பட் ஒர்க் அவுட் ஆகும்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கலுக்குப் பின் விஜய்யிடம் விசாரணை...ஜன.,19ல் மீண்டும் அழைக்கப்பட வாய்ப்பு

news

அண்ணாமலை பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. மகாராஷ்டிரா முதல்வர்

news

விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்

news

வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!

news

தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்