டெல்லி: மகளிர் டி20 உலக கோப்பை போட்டி வங்கதேசத்தில் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி இந்தத் தொடர் வங்கதேசத்தில் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
வங்கதேசத்தில் பெரும் அரசியல் சூறாவளி வீசி வருகிறது. அரசுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறி பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு வந்து விட்டார். வங்கதேச ராணுவம் தற்போது ஆட்சியை கையில் எடுத்துள்ளது. ராணுவத்தின் துணையுடன் இடைக்கால ஆட்சி அமையவுள்ளது.
இந்த நிலையில் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் குழப்ப நிலையால் திட்டமிட்டபடி இது நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. வங்கதேசத்தின் நிலைமை சீராகும் பட்சத்தில் ஐசிசி திட்டமிட்ட படி போட்டியை வங்கதேசத்தில் நடத்தும் என்று கூறப்பட்டாலும், இந்த திட்டத்தில் மாற்றம் நிகழலாம் என்றும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புக்கு கேள்விக்குறி ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால் போட்டித் தொடரை இந்தியா அல்லது வேறு நாட்டுக்கு மாற்றவும் ஐசிசி திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. நிலைமையை ஐசிசி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வரும் நாட்களில் இதுகுறித்த ஒரு தெளிவு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}