14 மணி நேரத்தில் 800 நில நடுக்கங்கள்.. ஆடிப் போன ஐஸ்லாந்து.. அவசர நிலை பிரகடனம்!

Nov 11, 2023,05:52 PM IST
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் அடுத்தடுத்து 800 நில நடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  இதில் மிகப் பெரிதாக கிரின்டிவாக் வடக்கே ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தென் மேற்கு ரெய்க்ஜான்ஸ் தீபகற்பப் பகுதியில் இந்த தொடர் நிலநடுக்கங்கள் உலுக்கி எடுத்து விட்டன. மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள்.  அப்பகுதியில் உள்ள ஒரு எரிமலை வெடிக்கத் தயார் நிலையில் உள்ளது. இதன் எதிரொலியாகவே இத்தனை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலையை காவல்துறை பிரகடனம் செய்துள்ளது. கிரின்டிவாக் வடக்கில் உள்ள சுன்ந்த்ஜுகாகிகார் என்ற பகுதிதான் அதிக அளவிலான நிலநடுக்கங்களைச் சந்தித்துள்ளது. 



எரிமலை வெடிக்கும் வரை நிலநடுக்கங்கள் தொடரும், இதை விட பெரிதாகவும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எரிமலை வெடிக்கும் நிகழ்வு பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிரின்டிவாக் கிராமத்தில் கிட்டத்தட்ட 4000 பேர் வசிக்கிறார்கள்.  தொடர் நிலநடுக்கம் நடந்த பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்குள்ள மக்களை வேறு பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இரண்டு நில நடுக்கங்கள் தலைநகர் ரெய்க்ஜாவிக் வரை உணரப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளிலும் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை இங்கு கிட்டத்தட்ட 24,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்து விட்டனர்.

ஐரோப்பி நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் நிறைய எரிமலைகள் உள்ளன. தற்போது அங்கு ஆக்டிவான நிலையில் 33 எரிமலைகள் உள்ளன.  ஐரோப்பாவிலேயே அதிக அளவிலான எரிமலைகள் ஐஸ்லாந்தில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்