அகமதாபாத்: எப்படியும் ஏதாவது ஒரு அணி தான் 100% வெற்றியை பெரும். சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வெல்லும். ஒருவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது போல் இறுதி போட்டி டிராவில் நிறைவடைந்தால் என்ன ஆகும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
ஏனெனில் டிராவில் நிறைவடைந்த போட்டிகள் எத்தனையோ உள்ளன. ஆனால் உலகக்கோப்பை என்று வரும்போது இரு அணிகளும் சம அளவில் எடுத்தால் கூடுதலாக ஒரு ஓவர் அளிக்கப்படும். அதாவது சூப்பர் ஓவர் எனப்படும் கூடுதல் ஓவர் வழங்கப்படும். அந்த ஆறு பந்துகளில் எந்த அணி அதிக ரன்கள் பெறுகிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்படும்.
சூப்பர் ஓவர் என்பது இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அந்த ஒரு ஓவரில் எந்த அணி கூடுதலாக ரன் பெறுகிறதோ அந்தணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் இதிலும் விதிவிலக்காக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் சம அளவிலான ரன்கள் எடுத்தன. இதனால் அந்தப் போட்டியில் எந்த அணியும் அதிக அளவிலான பவுண்டரிகளை அடித்ததோ அந்த அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை அவ்வாறு கிடையாது. அதற்குப் பதிலாக மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதுதான் இந்த ஆண்டின் ஸ்பெஷல். அதாவது முதல் சூப்பர் ஓவர் சுற்றில் இரண்டு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்திருந்தால், இரண்டாவதாக ஒரு சூப்பர் ஓவர் வழங்கப்படும். அந்த ஓவரில் எந்த அணி அதிக ரன்கள் எடுக்கிறதோ அந்த அணி மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டி அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்தியாவில் தான் வெற்றி பெறும் என சிலரும் ஆஸ்திரேலியா அணி தான் வெற்றி பெறும் என சிலரும் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.. பார்க்கலாம்.
2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!
ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!
நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!
ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை
தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
{{comments.comment}}