Ind Vs Aus: ஒரு வேளை.. இன்றைய ஃபைனல் டிராவில் முடிந்தால் என்ன நடக்கும்?

Nov 19, 2023,04:05 PM IST

அகமதாபாத்: எப்படியும் ஏதாவது ஒரு அணி தான் 100% வெற்றியை பெரும். சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வெல்லும். ஒருவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது போல் இறுதி போட்டி டிராவில் நிறைவடைந்தால் என்ன ஆகும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. 


ஏனெனில் டிராவில் நிறைவடைந்த போட்டிகள் எத்தனையோ உள்ளன. ஆனால் உலகக்கோப்பை என்று வரும்போது இரு அணிகளும் சம அளவில் எடுத்தால் கூடுதலாக ஒரு ஓவர் அளிக்கப்படும். அதாவது சூப்பர் ஓவர் எனப்படும் கூடுதல் ஓவர் வழங்கப்படும். அந்த ஆறு பந்துகளில் எந்த அணி அதிக ரன்கள் பெறுகிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்படும்.


சூப்பர் ஓவர் என்பது இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அந்த ஒரு ஓவரில் எந்த அணி கூடுதலாக ரன் பெறுகிறதோ அந்தணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் இதிலும் விதிவிலக்காக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் சம அளவிலான ரன்கள் எடுத்தன. இதனால் அந்தப் போட்டியில் எந்த அணியும் அதிக அளவிலான பவுண்டரிகளை அடித்ததோ அந்த அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.




ஆனால் இந்த முறை அவ்வாறு கிடையாது. அதற்குப் பதிலாக மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதுதான் இந்த ஆண்டின் ஸ்பெஷல். அதாவது முதல் சூப்பர் ஓவர் சுற்றில் இரண்டு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்திருந்தால், இரண்டாவதாக ஒரு சூப்பர் ஓவர் வழங்கப்படும். அந்த ஓவரில் எந்த அணி அதிக ரன்கள் எடுக்கிறதோ அந்த அணி மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.




உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டி அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்தியாவில் தான் வெற்றி பெறும் என சிலரும் ஆஸ்திரேலியா அணி தான் வெற்றி பெறும் என சிலரும் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.. பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

அந்தக் காலத்துல பிள்ளைகள் அப்படி இருந்தாங்க.. இப்போ எப்படி இருக்காங்க?

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

அதிகம் பார்க்கும் செய்திகள்