சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்

Jan 14, 2026,12:57 PM IST

ஐதராபாத் : சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் பழைய காலத்து சூப்பர் ஹிட் பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்துவது ஒரு டிரெண்டாக மாறியுள்ளது. ஆனால், இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிராக மிகவும் கண்டிப்பான நிலையை எடுத்து வருகிறார்.


இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மன சங்கர வர பிரசாத் காரு' (Mana Shankara Vara Prasad Garu) திரைப்படத்தில், 'தளபதி' படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் புகழ்பெற்ற 'சுந்தரி' பாடல் ஒரு குறிப்பிட்ட காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், இளையராஜா இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பாரோ என்ற அச்சம் எழுந்தது. ஏற்கனவே சில படங்களுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.




இந்த விவகாரம் குறித்து இயக்குனர் அனில் ரவிபுடி தற்போது மௌனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், படத்தின் தயாரிப்புக் குழு ஏற்கனவே இளையராஜாவை அணுகி, அந்தப் பாடலைப் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற விஷயங்களில் ஒரு முறையான நடைமுறை இருப்பதாகவும், எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க தாங்கள் அதை சரியாகப் பின்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.


இளையராஜா தங்கள் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியதால், இதில் சட்ட ரீதியான சிக்கலோ அல்லது காப்புரிமை (Copyright) பிரச்சனைகளோ எழ வாய்ப்பில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். எனவே, சிரஞ்சீவியின் இந்தப் படத்திற்கு இளையராஜா தரப்பில் இருந்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!

news

களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்

news

Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?

news

ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!

news

வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை

news

போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா

news

இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

அதிகம் பார்க்கும் செய்திகள்