கோயம்புத்தூர்: என்னுடைய இசைக்கச்சேரி ஜூன் 7-ம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு இருக்கும் பதட்டமான சூழ்நிலையில் இசை நிகழ்ச்சி வைத்தால் நன்றாக இருக்காது என இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் இளையராஜா தனது முதல் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றி வரலாறு படைத்தார். இதற்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தன. இதனையடுத்து நாடு முழுவதும் இசை கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்விப்பேன் என தெரிவித்திருந்தார். அதன்படி, சமீபத்தில் திருநெல்வேலியில் இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தினார். இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜாவின் இசை மழையில் நனைந்தனர்.

அந்த வகையில் கோவை புதூரில் உள்ள ஜி ஸ்கொயர் 7 ஹில்ஸ் மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி மே 17ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தேதி மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில், இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவிவரும் பதற்றம் காரணமாக இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு மே 31ஆம் தேதி நடைபெறும் எனவும், இந்த நிகழ்ச்சிக்காக ஏற்கனவே பெற்றுள்ள டிக்கெட்டுகளை பயன்படுத்தி ரசிகர்கள் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தற்போது தனது இசை கச்சேரி மீண்டும் தள்ளிப் போவதாக இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவைப்புதூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற இருந்த என்னுடைய இசைக்கச்சேரி வரும் ஜூன் 7ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு இருக்கும் பதற்றமான சூழ்நிலையில் இசை நிகழ்ச்சியை வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை
போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை
{{comments.comment}}