தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

Nov 27, 2025,06:26 PM IST

சென்னை : வங்கடக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று 4 மாவட்டங்களிலும், நாளை 5 மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. 


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வியாழக்கிழமை (நவம்பர் 27, 2025) மாலைக்குள் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி சனிக்கிழமை (நவம்பர் 29, 2025) நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், வியாழக்கிழமை மாலைக்குள் புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளைக் கடந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி சனிக்கிழமை நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. 




தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 28, 2025) முதல் தமிழகம் முழுவதும் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று டெல்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். சனிக்கிழமை அன்று, வானிலை அமைப்பு வட தமிழகத்தை நோக்கி நகரும்போது, தீவிர மழை வட தமிழக மாவட்டங்களுக்கும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழையாக பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28ம் தேதி தஞ்சை, திருவார6ர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கோல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 29ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வவிடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்