அரசு மருத்துவமனைகளில்.. நோயாளிகளுக்கு டேக் முறை அமல்.. மெட்டல் டிடெக்டர் சோதனையும் அறிமுகம்!

Nov 14, 2024,05:16 PM IST

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்த பாலாஜியை, விக்னேஷ் என்பவர் தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி ஏழு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்தார். உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 


மருத்துவரை தாக்கிய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது ‌.




இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை பார்ப்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரசு  மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  மருத்துவமனைக்குள் வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்களை கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆகிய நான்கு வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நீல நிறம்  பொது மருத்துவம் என பிரிக்கப்பட்டுள்ளது.


அதில் நோயாளிகளின் பெயர், அட்டெண்டர் பெயர், வார்டு பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் டேக் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டேக் கையில் கட்டி இருந்தால் தான் மருத்துவமனைக்கு உள்ளே வரவும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக செயல்பாட்டில் வரும் என  தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

அதிகம் பார்க்கும் செய்திகள்