அரசு மருத்துவமனைகளில்.. நோயாளிகளுக்கு டேக் முறை அமல்.. மெட்டல் டிடெக்டர் சோதனையும் அறிமுகம்!

Nov 14, 2024,05:16 PM IST

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்த பாலாஜியை, விக்னேஷ் என்பவர் தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி ஏழு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்தார். உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 


மருத்துவரை தாக்கிய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது ‌.




இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை பார்ப்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரசு  மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  மருத்துவமனைக்குள் வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்களை கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆகிய நான்கு வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நீல நிறம்  பொது மருத்துவம் என பிரிக்கப்பட்டுள்ளது.


அதில் நோயாளிகளின் பெயர், அட்டெண்டர் பெயர், வார்டு பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் டேக் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டேக் கையில் கட்டி இருந்தால் தான் மருத்துவமனைக்கு உள்ளே வரவும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக செயல்பாட்டில் வரும் என  தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கவலையில் மூழ்கிய கிராமங்கள்.. சோகத்தில் மக்கள்.. விமான நிலைய விசனங்கள்!

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

news

எங்கள் வீட்டில் எல்லா நாளும்.. The Importance of Joint Family

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்

news

முடியப் போகும் வருடம்.. மறப்போம்.. மன்னிப்போம்.. I'm sorry!

news

சுட்டக் காத்திருக்கும் விரல்கள்.. The role of Criticism!

news

ஆரோக்கியத்தின் சுரங்கம் வெந்தயக் கீரை: சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை தீர்வு தரும் அற்புத மூலிகை!

அதிகம் பார்க்கும் செய்திகள்