10th பொதுத்தேர்வில்.. அதிக தேர்ச்சி விகிதத்தில்.. சிவகங்கை முதலிடத்தை பிடித்து சாதனை..!

May 16, 2025,05:46 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டம்  98.31 சதவீதம் பெற்று  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.


2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது.  இதில் மொத்தம் 93.80 சதவீதம் மாணவ மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.74 சதவீதமும், மாணவிகள் 95.88சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.




குறிப்பாக, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 98.31 சதவீதம் பெற்று  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.


அதேபோல், விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 96.76% பெற்று  மூன்றாவது இடத்தையும்  பிடித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி 96.66 சதவீதம் பெற்று நான்காவது இடத்தையும், திருச்சி 96.61 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.


மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்


சிவகங்கை - 98.31 %

விருதுநகர் - 97.45

தூத்துக்குடி - 96.76

கன்னியாகுமரி - 96.66

திருச்சி - 96.61

கோயம்புத்தூர்-  96.47

பெரம்பலூர்- 96.46

அரியலூர் - 96.38

தர்மபுரி - 96.31

கரூர் - 96.24

ஈரோடு- 96

தஞ்சாவூர் - 95.57

திருவாரூர்- 95.27

தென்காசி- 95.26

விழுப்புரம் -95.09

காஞ்சிபுரம் - 94.85

திருப்பூர் - 94.84

கிருஷ்ணகிரி -94.64

நாமக்கல் - 94.52

கடலூர் -94.51

திருநெல்வேலி -94.16

மதுரை- 93.93

மயிலாடுதுறை- 93.9

ராமநாதபுரம் - 93.75

புதுக்கோட்டை - 93.53

திண்டுக்கல்- 93.28

நீலகிரி - 93.26

திருவண்ணாமலை- 93.1

திருப்பத்தூர்- 92.86

சேலம்- 92.17

நாகப்பட்டினம் - 91.94

தேனி- 91.58

ராணிப்பேட்டை -91.3

சென்னை- 90.73

செங்கல்பட்டு -89.82

திருவள்ளூர் - 89.6

கள்ளக்குறிச்சி - 86.91

வேலூர்- 85.44

புதுச்சேரி- 97.37

காரைக்கால் - 93.6


நூற்றுக்கு நூறு தேர்ச்சி விகிதம்:




பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பண்கள் எடுத்தவர்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல் சமூக அறிவியலில் 10,256  மாணவர்களும், கணிதத்தில் 1,996  மாணவர்களும், ஆங்கிலத்தில் 346 மாணவர்களும்..


முதல் மொழியான தாய் மொழி தமிழில்  8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்