சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 93.80 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.74 சதவீதமும், மாணவிகள் 95.88சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 98.31 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அதேபோல், விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 96.76% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி 96.66 சதவீதம் பெற்று நான்காவது இடத்தையும், திருச்சி 96.61 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
சிவகங்கை - 98.31 %
விருதுநகர் - 97.45
தூத்துக்குடி - 96.76
கன்னியாகுமரி - 96.66
திருச்சி - 96.61
கோயம்புத்தூர்- 96.47
பெரம்பலூர்- 96.46
அரியலூர் - 96.38
தர்மபுரி - 96.31
கரூர் - 96.24
ஈரோடு- 96
தஞ்சாவூர் - 95.57
திருவாரூர்- 95.27
தென்காசி- 95.26
விழுப்புரம் -95.09
காஞ்சிபுரம் - 94.85
திருப்பூர் - 94.84
கிருஷ்ணகிரி -94.64
நாமக்கல் - 94.52
கடலூர் -94.51
திருநெல்வேலி -94.16
மதுரை- 93.93
மயிலாடுதுறை- 93.9
ராமநாதபுரம் - 93.75
புதுக்கோட்டை - 93.53
திண்டுக்கல்- 93.28
நீலகிரி - 93.26
திருவண்ணாமலை- 93.1
திருப்பத்தூர்- 92.86
சேலம்- 92.17
நாகப்பட்டினம் - 91.94
தேனி- 91.58
ராணிப்பேட்டை -91.3
சென்னை- 90.73
செங்கல்பட்டு -89.82
திருவள்ளூர் - 89.6
கள்ளக்குறிச்சி - 86.91
வேலூர்- 85.44
புதுச்சேரி- 97.37
காரைக்கால் - 93.6
நூற்றுக்கு நூறு தேர்ச்சி விகிதம்:

பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பண்கள் எடுத்தவர்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல் சமூக அறிவியலில் 10,256 மாணவர்களும், கணிதத்தில் 1,996 மாணவர்களும், ஆங்கிலத்தில் 346 மாணவர்களும்..
முதல் மொழியான தாய் மொழி தமிழில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}