சம்மன் கிழிக்கப்பட்ட வழக்கில்.. சீமான் வீட்டு பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமின்..!

Mar 13, 2025,07:12 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் அமுல்ராஜ் மற்றும் பணியாளர்  சுபாகரனுக்கு நிபந்தனை  ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


நடிகை தொடர்ந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று  வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டு முன்பு சம்மன் ஒட்டினார். இந்த சம்மன் ஒட்டிய சில மணி நேரத்திலேயே சீமான் வீட்டு பணியாளர் சுபாகரன் சம்மனை கிழித்தெறிந்தார். இதனால், சீமான் வீட்டுப் பாதுகாவலர் அமுல்ராஜுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் பணியாளர் சுபாகரன் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் இருவரையும் கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் உள்ள துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 




பின்னர் கைது செய்யப்பட்ட இருவர் மீதும், சம்மனைக் கிழித்து வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சீமான் விட்டு காவலர் மற்றும் பணியாளர்கள் இருவரும் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம் என்பவர் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார்‌. போலீசார் பதில் அளிக்க கால அவகாசம் கொடுத்து மனு மீதான விசாரணை மார்ச் 13க்கு தள்ளி வைக்கப்பட்டது. 


இந்த நிலையில், சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் பணியாளர் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாதுகாவலர் அமல்ராஜ் துப்பாக்கி உரிமையை மீறி இருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். இருவரையும் இனி சிறையில் வைக்க தேவையில்லை என கூறி பணியாளர் சுபாகரன் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை இருவரும் தினமும் காலை 10.30 மணிக்குள் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்

news

Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா

news

C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!

news

பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?

news

போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!

news

பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்