சம்மன் கிழிக்கப்பட்ட வழக்கில்.. சீமான் வீட்டு பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமின்..!

Mar 13, 2025,07:12 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் அமுல்ராஜ் மற்றும் பணியாளர்  சுபாகரனுக்கு நிபந்தனை  ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


நடிகை தொடர்ந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று  வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டு முன்பு சம்மன் ஒட்டினார். இந்த சம்மன் ஒட்டிய சில மணி நேரத்திலேயே சீமான் வீட்டு பணியாளர் சுபாகரன் சம்மனை கிழித்தெறிந்தார். இதனால், சீமான் வீட்டுப் பாதுகாவலர் அமுல்ராஜுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் பணியாளர் சுபாகரன் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் இருவரையும் கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் உள்ள துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 




பின்னர் கைது செய்யப்பட்ட இருவர் மீதும், சம்மனைக் கிழித்து வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சீமான் விட்டு காவலர் மற்றும் பணியாளர்கள் இருவரும் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம் என்பவர் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார்‌. போலீசார் பதில் அளிக்க கால அவகாசம் கொடுத்து மனு மீதான விசாரணை மார்ச் 13க்கு தள்ளி வைக்கப்பட்டது. 


இந்த நிலையில், சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் பணியாளர் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாதுகாவலர் அமல்ராஜ் துப்பாக்கி உரிமையை மீறி இருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். இருவரையும் இனி சிறையில் வைக்க தேவையில்லை என கூறி பணியாளர் சுபாகரன் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை இருவரும் தினமும் காலை 10.30 மணிக்குள் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஹைதராபாத் அருகே.. மருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலி எண்ணிக்கை 32 ஆனது!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

அழகான அரேகா பனை (Areca palm).. பாசிட்டிவிட்டி பரப்பும்.. ஆரோக்கியத்துக்கும் நல்லது!

news

டெல்லியா நீங்க.. வச்சிருக்கிறது பழைய வண்டியா.. அப்படீன்னா உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 01, 2025... இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்