சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், அரியலூர் மாவட்டம் 98.82 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வை மொத்தம் 8.21 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 95.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், அரியலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 98.82 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதேபோல், ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 97.98 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.53% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் கோவை 97.48 சதவீதம் பெற்று நான்காவது இடத்தையும், கன்னியாகுமரி 97.01 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.
நூற்றுக்கு நூறு தேர்ச்சி விகிதம்:
கணினி அறிவியலில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியலில் 3,181 மாணவர்களும், கணிதத்தில் 3,022 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் தமிழில் 135 மாணவர்களும், வணிகவியலில் 1,624 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}