பிளஸ் டூ பொதுத்தேர்வில்.. அதிக தேர்ச்சி விகிதத்தில்.. அரியலூர் முதலிடத்தை பிடித்து சாதனை..!

May 08, 2025,10:42 AM IST

சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், அரியலூர் மாவட்டம்  98.82 சதவீதம் பெற்று  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.



2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வை மொத்தம் 8.21 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது.  இதில் மொத்தம் 95.03 சதவீதம் மாணவ மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


குறிப்பாக, பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், அரியலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 98.82 சதவீதம் பெற்று  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.





அதேபோல், ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 97.98 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.53% பெற்று  மூன்றாவது இடத்தையும்  பிடித்துள்ளது. மேலும் கோவை 97.48 சதவீதம் பெற்று நான்காவது இடத்தையும், கன்னியாகுமரி 97.01 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.


நூற்றுக்கு நூறு தேர்ச்சி விகிதம்:


கணினி அறிவியலில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியலில் 3,181  மாணவர்களும், கணிதத்தில் 3,022 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் தமிழில் 135 மாணவர்களும், வணிகவியலில் 1,624 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்