Income tax rebate: புதிய வரித் திட்டத்தின் கீழ் உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்வு

Feb 01, 2023,12:38 PM IST
புதுடில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரித் திட்டத்தின் வருமான உச்சவரம்பு,  ரூ. 7 லட்சம் ஆக அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.



அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை காலம் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் வரையிலான வருமான வரி ரிபேட் புதிய வரி முறையின் கீழ் கொண்டு வரப்படும். 

புதிய வரி விதிப்பு முறையின் கீழ் அதிகமாக உள்ள கூடுதல் கட்டண விகிதம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும்.   ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.  

மத்திய பட்ஜெட் எதிரொலி : கிடுகிடுவென உயர்ந்த பங்குச்சந்தைகள்

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இன்று காலை துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இந்நிலையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புக்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர துவங்கி விட்டன.

பகல் 12.45 நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 60,500 புள்ளிகளை எட்டியது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 258 புள்ளிகள் உயர்ந்து 17,920 புள்ளிகளை எட்டியது.


சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்