சென்னை: சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
1977ம் ஆண்டு தொடக்கப்பட்டது தான் பிரபல ஜவுளிக்கடையான போத்தீஸ். முதன் முதலில இக்கடை ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் தொடங்கப்பட்டது. இன்று இப்பெரியல் பல்வேறு இடங்களில் பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமான விரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அபிராமபுரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் நிறுவன உரிமையாளர் மகன்கள் அசோக், போத்ராஜா வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை மற்றும் துணிக்கடையில் சோதனை நடைபெற்று வருகிறது. 3 கார்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பக்கவாட்டு வழியாக உள்ளே சென்று சோதனை செய்து வருகின்றனர். வழக்கமாக போலீஸ் அல்லது துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரி சோதனை நடத்தப்படும். இந்த சோதனை இன்று வழக்கத்துக்கு மாறாக எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் சோதனை காரணமாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}