டெல்லி: திமுகவும், இந்தியா கூட்டணியும் இந்துக்களுக்கும், சனாதன தர்மத்துக்கும் எதிரானவர்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் நிர்மலா சீதாராமன். சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதேசமயம், அவரது பேச்சுக்கு ஆதரவுகளும் குவிந்தன.
இந்த நிலையில் என்டிடிவிக்கு நிர்மலா சீதாராமன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் இதுகுறித்து அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
இந்தியாவை உடைக்க விரும்புவோரை ஆதரிக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியான திமுகவின் தலைவர்கள் இந்துக்களுக்கும், சனாதன தர்மத்துக்கும் எதிராக பேசி வருகிறார்கள். அவர்களை காங்கிரஸ் பாதுகாக்க விரும்பகிறது.
தமிழ்நாட்டு அமைச்சர் பகிரங்கமாக, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று சவால் விட்டுப் பேசுகிறார். அதை எதிர்க்கக் கூடாதாம், ஒழிக்க வேண்டுமாம். ஆனால் இவரது பேச்சை, இந்தியா கூட்டணியின் எந்தக் கட்சியும் பகிரங்கமாக, திட்டவட்டமாக கண்டிக்கவில்லை.
சனாதனத்தை எதிர்ப்பது என்பது திமுகவின் கொள்கை. அதுதான் அவர்களது அஜென்டா. அதை நான் பலமுறை பார்த்துள்ளேன். இவர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அது இந்தியாவின் இதர பகுதிகளுக்குத் தெரியாது. காரணம், மொழிப் பிரச்சினை. இதுநாள் வரை இது இப்படியேதான் இருந்து வந்தது. ஆனால் இன்று அமைச்சர் பேசுவது என்னவென்று இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் பரவி விட்டது. காரணம், சமூக வலைதளங்களின் தாக்கத்தால். கடந்த 70 ஆண்டுகளாக விஷமப் பிரச்சாரத்தில்தான் ஈடுபட்டு வருகிறது திமுக.
தமிழ்நாடு அமைச்சரின் பேச்சு அரசியல் சாசனத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டது. தான் வகிக்கும் பதவிக்கும், எடுத்த உறுதிமொழிக்கும் எதிரானது என்றும் தெரிந்து வேண்டும் என்றேதான் அவர் பேசியுள்ளார் என்றார் நிர்மலா சீதாராமன்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}