டில்லி : லோக்சபா தேர்தல் நிறைவடைந்த பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் முதல் முறையாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த திடீர் சந்திப்பு என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், பாஜக.,வை மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க விடக் கூடாது என்பதற்காக 20 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும், இந்தியா கூட்டணி 243 இடங்களையும் பெற்றன. ஜூன் 04ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக., ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் இந்த வாரம் டில்லியில் முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்க முன் ஜூன் 01ம் தேதி இவர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி இதுவரை இறுதி செய்யப்படவில்லையாம்.
ஜூன் 01ம் தேதி நடந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. காரணம் அதே நாளில் மேற்குவங்கத்தில் பல தொகுதிகளில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால் இந்த முறை நடைபெறும் கூட்டத்தில் மமதா கண்டிப்பாக பங்கேற்பார் என சொல்லப்படுகிறது. தற்போது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடந்த வருவதால் ஏற்கனவே இந்தியா கூட்டணியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் டில்லியில் தான் இருந்து வருகிறார்கள். சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று டில்லி வந்தார். இன்னும் சில தலைவர்களும் டில்லி வர உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பார்லிமென்டில், ஆயுள் காப்பீடுகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி.,யை திரும்ப பெற வலியுறுத்தி பார்லிமென்ட் நுழைவுவாயில் அருகில் இந்தியா கூட்டணி எம்பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத் தொடர் துவங்கியது முதலே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடப்பு பார்லிமென்ட் கூட்டம் நடக்க உள்ளது. இதனால் இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தான் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடலாம் என சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் தொடரும் கனமழை... இன்று முதல் ஆக., 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது : முதல்வர் முக ஸ்டாலின்!
தேர்தலில் தோற்று செத்து சாம்பலானாலும் நடக்காது... நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டம்
ஆகஸ்ட் 15 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
நியாயமான தேர்தல் உறுதி செய்யப்பட வேண்டும்.. ராகுல்காந்தி கைதுக்கு விஜய் கண்டனம்!
உலகத்தின் பாதியை அழிப்போம்.. அமெரிக்காவிலிருந்து மிரட்டல் விடுத்த.. பாக். ராணுவ தளபதி
செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
பச்சைக் கொண்டைக் கடலை.. செம சத்து.. ஹெல்த்துல கெத்து.. எப்படி சாப்பிடணும் தெரியுமா?
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... சவரனுக்கும் எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}