டில்லி : தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக சி.பி.ராதாகிஷ்ணனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சி.பி. ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஆதரித்துள்ளனர். சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவின் ஆளுநராக இருக்கிறார். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் நீண்ட காலமாக நாட்டுக்கு சேவை செய்து வருகிறார் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் திங்கட்கிழமை காலை ஒரு முக்கியமான சந்திப்பை நடத்த உள்ளனர். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதுதான் இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம். மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் காலை 10.15 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும். ஆளும் கூட்டணி சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியல் பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இந்த கூட்டத்தை ஒருங்கிணைக்கிறார்.
கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
வாயை மூடிப் பேசுங்கள்.. மூளைக்கு நல்லது .. Silence can spark the growth of new brain cells
சரியான முடிவா இருந்தாலும்.. லேட் பண்ணிடாதீங்க.. Even a correct decision is wrong when it is too late
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
பள்ளித் தேர்வு!
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
இளமை திரும்பிய தருணம்.. கூடுவாஞ்சேரியில் கோலாகலமாக நடந்த மூத்த குடிமக்கள் சங்கமம்
நட்பு எனும் கவசம்
ஆச்சரியம் ஆனால் உண்மை
{{comments.comment}}