டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டிஆர் பாலு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசுகையில், 295 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் நிச்சயம் வெல்வோம். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும். மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, கலெக்டர்களை அழைத்துப் பேசி வருகிறார். இது அப்பட்டமான விதி மீறலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளிக்கும். அதிகாரிகள் அரசியல் சாசனத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும். பாரபட்சமாக செயல்படக் கூடாது.
இந்தியா கூட்டணிக் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாது. தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எக்சிட் போல் மூலமாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதை முறியடிப்போம். எக்சிட் போல் விவாதங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணித் தலைவர்கள் இணைந்தே இருக்கின்றனர். எங்களைப்பிரிக்க எந்த சதி நடந்தாலும் அது ஜெயிக்காது என்றார் கார்கே.
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
{{comments.comment}}