டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டிஆர் பாலு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசுகையில், 295 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் நிச்சயம் வெல்வோம். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும். மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, கலெக்டர்களை அழைத்துப் பேசி வருகிறார். இது அப்பட்டமான விதி மீறலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளிக்கும். அதிகாரிகள் அரசியல் சாசனத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும். பாரபட்சமாக செயல்படக் கூடாது.
இந்தியா கூட்டணிக் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாது. தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எக்சிட் போல் மூலமாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதை முறியடிப்போம். எக்சிட் போல் விவாதங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணித் தலைவர்கள் இணைந்தே இருக்கின்றனர். எங்களைப்பிரிக்க எந்த சதி நடந்தாலும் அது ஜெயிக்காது என்றார் கார்கே.
தவெக ரோட்ஷோவுக்கு அனுமதி இல்லை.. கூட்டம் நடத்தவும் குறுகிய காலம்.. புதுச்சேரி திட்டம் கேன்சல்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 03, 2025... இன்று கார்த்திகை தீபத் திருநாள்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
{{comments.comment}}