டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டிஆர் பாலு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசுகையில், 295 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் நிச்சயம் வெல்வோம். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும். மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, கலெக்டர்களை அழைத்துப் பேசி வருகிறார். இது அப்பட்டமான விதி மீறலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளிக்கும். அதிகாரிகள் அரசியல் சாசனத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும். பாரபட்சமாக செயல்படக் கூடாது.
இந்தியா கூட்டணிக் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாது. தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எக்சிட் போல் மூலமாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதை முறியடிப்போம். எக்சிட் போல் விவாதங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணித் தலைவர்கள் இணைந்தே இருக்கின்றனர். எங்களைப்பிரிக்க எந்த சதி நடந்தாலும் அது ஜெயிக்காது என்றார் கார்கே.
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}