டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டிஆர் பாலு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசுகையில், 295 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் நிச்சயம் வெல்வோம். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும். மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, கலெக்டர்களை அழைத்துப் பேசி வருகிறார். இது அப்பட்டமான விதி மீறலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளிக்கும். அதிகாரிகள் அரசியல் சாசனத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும். பாரபட்சமாக செயல்படக் கூடாது.
இந்தியா கூட்டணிக் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாது. தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எக்சிட் போல் மூலமாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதை முறியடிப்போம். எக்சிட் போல் விவாதங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணித் தலைவர்கள் இணைந்தே இருக்கின்றனர். எங்களைப்பிரிக்க எந்த சதி நடந்தாலும் அது ஜெயிக்காது என்றார் கார்கே.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}