டெல்லி: இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமரும். அதேசமயம், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் வெற்றி தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பாசிச அரசை தொடர்ந்து நாங்கள் எதிர்ப்போம். மக்கள் தந்த தீர்ப்பு பிரதமர் மோடிக்கு எதிரானது. ஆனால் அவரும் சரி, பாஜகவும் சரி மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படவே விரும்புகிறார்கள். இருப்பினும் இப்போதைக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே விரும்புகிறோம். தொடர்ந்து பாசிச அரசை எதிர்ப்போம். தேவையான நேரத்தில் தேவையான முடிவை எடுப்போம். மக்களின் அபிலாஷைகளை பாஜக புறம் தள்ளுவதை அனுமதிக்க மாட்டோம்.

இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். நமது அரசியல் சாசனத்தைக் காக்கும் யோசனை யுடன் கூடிய, பொருளாதார சமூக, அரசியல் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள யார் வேண்டுமாலும் இந்தியா கூட்டணியில் இணையலாம் என்றார் கார்கே.
முன்னதாக சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோரை மீண்டும் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த இரு தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது என்று முடிவெடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக கடிதமும் கொடுத்து விட்டதால் அந்த யோசனையை இந்தியா கூட்டணி தலைவர்கள் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.
பிரதமர் மோடி ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!
அதேசமயம், தேர்தல் தீர்ப்பு பிரதமர் மோடிக்கு எதிரானது என்பதால் அவர் பதவி விலக வேண்டும், மீண்டும் பிரதமராகக் கூடாது என்ற கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறது இந்தியா கூட்டணி.
நடந்து முடிந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு 232 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் காங்கிரஸின் பங்கு 99 ஆகும். பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சிக்கு 240 இடங்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 இடங்களும் கிடைத்துள்ளன. இதனால் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கவுள்ளது.
முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?
விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
{{comments.comment}}