டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே முதல் முறையாக முழு அளவிலான கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் 3 டிவென்டி 20 போட்டிகளில் மோதவுள்ளன. இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
ஜனவரி 11ம் தேதி மொஹாலி மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும். 14ம் தேதி இந்தூரில் 2வது போட்டியும், ஜனவரி 17ம் தேதி பெங்களூருவில் 3வது போட்டியும் நடைபெறும்.

நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளை பந்தாடியது. இங்கிலாந்தை அது வீழ்த்திய விதம் அனைவரையும் அதிர வைத்தது. உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றிகளைப் பெற்று 6வது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்லதொரு பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், இந்தியாவுக்கு டஃப் தரும் வகையில் ஆப்கானிஸ்தான் கண்டிப்பாக ஆட முயற்சிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}