தரம்சலா: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவின் இன்றைய வெற்றியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இந்தியா இங்கிலாந்துக்கு இடையே தரம்சலாவில் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நடந்து வந்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை 218 ரன்கள் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் 477 ரன்களுக்கு முடித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை 195 ரன்கள் இழந்ததால், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், ஜோ ரூட் 26 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களும் எடுத்தனர்.சோயப் பாசீர் 11 ரன்களை எடுத்தார். இந்திய தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
ஏற்கனவே நடந்த நான்கு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்த தொடரையும் இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டும் வென்றது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}