பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: மானு பேக்கர் - சரப்ஜித் சிங் அசத்தல்.. 2வது பதக்கத்தை வென்றது இந்தியா!

Jul 30, 2024,01:49 PM IST

பாரீஸ்:   பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய ஜோடி மானு பேக்கர் - சரப்ஜித் சிங் வெண்கலப் பதக்கம் வென்றனர்.


இது இந்தியாவுக்கு 2வது பதக்கமாகும். மானு பேக்கருக்கும் இது 2வது பதக்கம். இந்தியா பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த இரண்டுக்கும் மானு பேக்கரே காரணம் என்பது விசேஷமானது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக இந்திய ஜோடி ஆடியது.




மானு பேக்கர் இன்று ஒரு புதிய சாதனையை படைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனைதான் அது.


மானு பேக்கர் - சரப்ஜித் சிங் இணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உளளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் இவர்களுக்குப் பாராட்டுகளும், வாழ்த்தும் குவிகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

அத்தே.. அத்தே...!

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!

news

சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!

news

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

news

நான் விரும்பும் வகுப்பறை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்

அதிகம் பார்க்கும் செய்திகள்