அசத்தும் இந்தியா.. 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள்!

Apr 24, 2023,04:40 PM IST
டெல்லி: அடிப்படைக் கட்டமைப்புப் பிரிவில் இந்தியா படு வேகமாக வளர்ந்து வருவதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கடந்த 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்றால் முதலில் அடிப்படக் கட்டமைப்பு வளர்ச்சி பெற வேண்டும். சாலைகள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடிப்படை. எனவேதான் எப்போதுமே சாலை வளர்ச்சிக்கு மத்திய அரசுகளும் சரி, மாநில அரசுகளும் சரி முக்கியத்துவம் கொடுப்பார்கள்.



எந்த மாநிலத்தில் நல்ல சாலை வசதி உள்ளதோ அந்த மாநிலமே பொருளாதாரத்திலும் உயர்ந்ததாக இருக்கும். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவில் இதுவரை நடந்திராத மிகப் பெரியவிஷயம் என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.

2014-15ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் 97,830 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. தற்போது இவை 2023ம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 155 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.

2014-15ம் ஆண்டு காலகட்டத்தில ஒரு நாளைக்கு 12.1 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன. 2021-22ம் ஆண்டு இது ஒரு நாளைக்கு 28.6 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

அதிகம் பார்க்கும் செய்திகள்