அசத்தும் இந்தியா.. 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள்!

Apr 24, 2023,04:40 PM IST
டெல்லி: அடிப்படைக் கட்டமைப்புப் பிரிவில் இந்தியா படு வேகமாக வளர்ந்து வருவதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கடந்த 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்றால் முதலில் அடிப்படக் கட்டமைப்பு வளர்ச்சி பெற வேண்டும். சாலைகள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடிப்படை. எனவேதான் எப்போதுமே சாலை வளர்ச்சிக்கு மத்திய அரசுகளும் சரி, மாநில அரசுகளும் சரி முக்கியத்துவம் கொடுப்பார்கள்.



எந்த மாநிலத்தில் நல்ல சாலை வசதி உள்ளதோ அந்த மாநிலமே பொருளாதாரத்திலும் உயர்ந்ததாக இருக்கும். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவில் இதுவரை நடந்திராத மிகப் பெரியவிஷயம் என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.

2014-15ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் 97,830 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. தற்போது இவை 2023ம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 155 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.

2014-15ம் ஆண்டு காலகட்டத்தில ஒரு நாளைக்கு 12.1 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன. 2021-22ம் ஆண்டு இது ஒரு நாளைக்கு 28.6 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்