மும்பை: அபிஷேக் சர்மா தனது தவறுகளை இன்னும் திருத்திக் கொள்ளவே இல்லை. அவரை இறுதிப் போட்டியில் சேர்க்கக் கூடாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து இடையே இன்று டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை இப்போட்டி ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தொடரில் இதுவரை 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை இறுதிப் போட்டியில் நீக்க வேண்டும் என்று கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் அடித்த 55 ரன்கள் மட்டுமே பெரிய ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், இது ஒரு கடினமான முடிவுதான். அபிஷேக் சர்மா ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கலாம், ஆனால் அவர் தனது அவுட் ஆகும் முறையிலிருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஒரே மாதிரியான பந்துகளில் மீண்டும் மீண்டும் ஆட்டமிழக்கிறார். அவருக்குப் பதிலாக இஷான் கிஷனை சஞ்சு சாம்சனுடன் தொடக்க வீரராக களமிறக்கி, பினிஷர் இடத்திற்கு ரிங்கு சிங்கை கொண்டு வர வேண்டும்.
சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் தன்னம்பிக்கை தற்போது குறைந்து காணப்படுவதால், அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும். அகமதாபாத் போன்ற பெரிய மைதானங்களில் குல்தீப் யாதவ் சிறப்பாகச் செயல்படுவார் என்றார் கவாஸ்கர்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த முக்கிய போட்டியில், இந்தியா தனது மூன்றாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.
பெண்கள் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல.. தினமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!
பாதிப்புக்குள்ளாகும் பிற பெண்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டாமா.. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
மண்ணின் மகத்துவம்.. பெண்ணே நீ தனித்துவம்!
இன்னும் அபிஷேக் சர்மா திருந்தவே இல்லையே.. சுனில் கவாஸ்கருக்கு வருத்தம்ப்பா!
குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்த ஈரான்.. எரிபொருள் டேங்கர்கள் பெரும் சேதம்
அவள்.. தைரியத்துடன் நிற்கிறாள்.. போராடத் தயாராக இருக்கிறாள்!
பெண்கள் சுதந்திரம்.. Women freedom!
ஓ பெண்ணே வெற்றி காண வெளியே வா!
இந்திய வரலாற்றில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்.. வரலாறு அறிவோம்!
{{comments.comment}}