டெல்லி: 100வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும்போது நமது நாடு வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வல்லரசு இந்தியாவில் ஊழலுக்கும், ஜாதிக்கும், மதவாதத்திற்கும் இடம் இருக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:
2047ம் ஆண்டு வாக்கில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக மாறியிருக்கும். அந்த நாட்டில் ஜாதிகளுக்கும், மதவாதத்திற்கும், ஊழலுக்கும் இடம் இருக்காது. இவை இல்லாத தேசிய வாழ்வை நமது மக்கள் வாழ்வார்கள்.
உலகம் இன்று நமது தலைமையை எதிர்நோக்கி இருக்கிறது. நமது வழிகாட்டலை எதிர்நோக்கியுள்ளது. நமது கொள்கைகளும், நமது பார்வையும், எதிர்காலத்திற்கான பாதையாக உலக நாடுகள் பார்க்கின்றன. ஜிடிபியை அடிப்படையாக கொண்டு மட்டுமே இதுவரை வளர்ச்சியைப் பார்த்து வந்த உலகம் இன்று மனித வாழ்க்கையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பார்க்க ஆரம்பித்துள்ளன. இந்த மாபெரும் மாற்றத்துக்கு இந்தியா மிகச் சிறந்த வினையூக்கியாக செயல்பட்டுள்ளது.
கோடானு கோடி பசி நிறைந்த வயிறுகள் அடங்கிய நாடாக, உலகம் நம்மைப் பார்த்து வந்தது. அது இப்போது மாறி விட்டது. 200 கோடி திறமையான கைககளும், 100 கோடி திறமையான மனங்களும் அடங்கிய நாடாக நாம் மாறி நிற்கிறோம்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நம்மை உலகம் நினைவு கூறும் வகையிலான அடித்தளத்தை அமைக்கக் கூடிய அளவிலான திறமைகளுடன் நாம் இப்போது இருக்கிறோம். இந்தியாவை மிகப் பெரிய மார்க்கெட்டாக உலகம் முன்பு பார்த்தது. இப்போது உலக சவால்களுக்கு விடை அளிக்கக் கூடிய தீர்வாக இந்தியா மாறியுள்ளது.
குறுகிய அரசியல் லாபத்திற்காக, இலவசங்கள் என்ற கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டை பெரும் நிதிச் சுமைக்கு முன்பு இருந்தவர்கள் ஆளாக்கி விட்டார்கள். தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட அவர்கள் மறந்து விட்டனர். மக்கள் மீது முன்பு இருந்த அரசுகளுக்கு நம்பிக்கை இல்லை. மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறி விட்டனர் என்றார் பிரதமர் மோடி.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}