வரைபடத்தில் இருந்தே அழித்து விடுவோம்.. கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டோம்.. ராணுவ தளபதி

Oct 03, 2025,04:56 PM IST

டெல்லி: உலக வரைபடத்தில் இருந்தே அழித்து விடுவோம். கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ராஜஸ்தானின் அனூப்கரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் ஜெனரல் திவேதி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியப் படைகள் இந்த முறை எந்தக் கட்டுப்பாட்டையும் (Restraint) கடைப்பிடிக்காது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்றால், அதன் புவியியல் இருப்பை (வரைபடத்தில் அதன் இடத்தை) இழக்க நேரிடும். பாகிஸ்தான் வரைபடத்தில் நீடிக்க விரும்பினால், அது அரசின் ஆதரவுடன் பயங்கரவாதத்தைத் தூண்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.


ஆபரேஷன் சிந்தூர் 1.0 செயல்பாட்டில் நாங்கள் கடைப்பிடித்த கட்டுப்பாட்டை இந்த முறை கடைப்பிடிக்க மாட்டோம். நீங்கள் வரைபடத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று பாகிஸ்தானே சிந்திக்கும் வகையில் இந்த முறை நாங்கள் செயல்படுவோம்.




பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்த மறுத்தால், ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் பதிப்பு விரைவில் வரக்கூடும். 


(ராணுவ வீரர்களிடம்) கடவுளின் விருப்பம் இருந்தால், விரைவில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு

news

பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்

news

இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!

news

மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!

news

இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!

news

நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!

news

இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works

news

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்

news

நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்