வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் Axiom-4 குழுவினர் செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவின் சான் டியாகோ அருகே வெற்றிகரமாக கடலில் இறங்கி பூமிக்கு திரும்பினர்.
18 நாட்கள் ISSல் தங்கியிருந்த பிறகு, 22.5 மணி நேர பயணத்தை அவர்கள் மேற்கொண்டு வந்து சேர்ந்துள்ளனர். சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் 1984க்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆவார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் 60க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டார். இந்த மிஷன் இந்தியாவின் Gaganyaan திட்டத்திற்கு முக்கியமானது. இது Axiom Space, NASA மற்றும் SpaceX ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
Dragon விண்கலமும், Axiom_Space Ax-4 குழுவும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து சான் டியாகோ கடற்கரையில் இன்று காலை 2:31 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில்) கடலில் இறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பினர். அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். 1984ல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவர்தான். ஜூன் 25, 2025 அன்று அவர் ISSக்குச் சென்றார். அங்கு 18 நாட்கள் இருந்தார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம், மன நலம் மற்றும் விண்வெளி உடை பொருட்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்தார்.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}