வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

Jul 15, 2025,06:14 PM IST

வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் Axiom-4 குழுவினர் செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவின் சான் டியாகோ அருகே வெற்றிகரமாக கடலில் இறங்கி பூமிக்கு திரும்பினர். 


18 நாட்கள் ISSல் தங்கியிருந்த பிறகு, 22.5 மணி நேர பயணத்தை அவர்கள் மேற்கொண்டு வந்து சேர்ந்துள்ளனர். சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் 1984க்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆவார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் 60க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டார். இந்த மிஷன் இந்தியாவின் Gaganyaan திட்டத்திற்கு முக்கியமானது. இது Axiom Space, NASA மற்றும் SpaceX ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.


Dragon விண்கலமும், Axiom_Space Ax-4 குழுவும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து சான் டியாகோ கடற்கரையில் இன்று காலை 2:31 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில்) கடலில் இறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பினர். அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.




சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். 1984ல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவர்தான். ஜூன் 25, 2025 அன்று அவர் ISSக்குச் சென்றார். அங்கு 18 நாட்கள் இருந்தார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம், மன நலம் மற்றும் விண்வெளி உடை பொருட்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்