டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பூர்ணம் குமார் ஷா இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியா பாகிஸ்தானிடையே அன்று முதல் பதற்றம் நிலவியது. இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி எல்லை தாண்டி தவறுதலாக பாகிஸ்தான் சென்றார் பாதுகாப்பு படை(BSF) வீரர் பூர்ணம் குமார்.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களால் அவர் கைது செய்யப்பட்டார். அப்போதே அவரை அழைத்து வர இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியா-பாகிஸ்தானிடையே மோதல் போக்கு இருந்ததால், பாகிஸ்தான் அவரை விடுவிக்க மறுத்து வந்தது. தற்போது இந்தியா-பாகிஸ்தானிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், சுமார் 20 நாட்களுக்கு பின்னர் இந்திய ராணுவத்திடம் பூர்ணம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி வழியாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தானில் இருந்து பூர்ணம் குமார் ஷா இன்று காலை 10,30 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பிரோஸ்பூர் செக்டார் பகுதியில் பணியில் இருந்த போது, பூர்ணம் குமார் ஷா தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார்.
இதனால் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரை தடுத்து வைத்தனர். பாகிஸ்தான் ரேஞ்சர்களுடனான தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியாவில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் முகமது அல்லா என்பவரை இந்தியா விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}