துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரைவராக பணியாற்றும் இந்தியருக்கு அந்த நாட்டின் புத்தாண்டு லாட்டரியில் ரூ. 44 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று அந்த டிரைவர் ஆனந்தத்தில் மூழ்கியுள்ளார்.
அவரது பெயர் முனாவர் பைரூஸ். இந்தியாவைச் சேர்ந்த இவர் அல் அயின் என்ற ஊரில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து வருமாடக எமிரேட்ஸில் வேலை பார்த்து வருகிறார் பைரூஸ். இந்த நிலையில் புத்தாண்டு லாட்டரியை வாங்கியிருந்தார் பைரூஸ். அதில் அவருக்கு ரூ. 44 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதை அவர் எதிர்பார்க்கவே இல்லையாம். இன்னும் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கிறார் பைரூஸ்.
மாதா மாதம் லாட்டரி டிக்கெட் வாங்குவது இவரது வழக்கம். இப்போதுதான் பரிசு கிடைத்துள்ளது. ஆனால் இந்த பரிசுச் சீட்டை இவர் மட்டும் வாங்கவில்லை. பைரூஸ் உள்பட 30 பேர் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளதால் பரிசுத் தொகையும் இந்த 33 பேருக்கும் சமமாகப் போகும்.

இதுகுறித்து பைரூஸ் கூறுகையில், இதை என்னால நம்பவே முடியலைங்க.. எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று கூட நான் இதுவரை நினைக்கவே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது என்றார் பைரூஸ்.
குமரேசனுக்கும் "கும்" பரிசு!
இதே நாளில் இன்னொரு இந்தியருக்கும் லாட்டரியில் ரூ. 22 கோடி பரிசு கிடைத்துள்ளது. அவர் தமிழ்நாட்டுக்காரர். பெயர் சுதீஷ் குமார் குமரசேன். இவர் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தில் என்ஜீனியராகப் பணியாற்றி வருகிறார். அபுதாபியில் வேலை பார்க்கிறார்.
விமான நிலையத்துக்கு வரும்போது அவ்வப்போது லாட்டரி சீட்டு வாங்குவது இவரது வழக்கம். இந்த முறை 22 கோடிக்கு பரிசு கிடைத்துள்ளது இவருக்கு. தனது 7வயது மகள்தான் லாட்டரி சீட்டு நம்பரை தேர்வு செய்ததாக கூறுகிறார் குமரேசன். எனது குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.
நாங்கள் சொந்த ஊரில் வீடு வாங்கியுள்ளோம். அந்த வீட்டின் மீது கடன் உள்ளது. அந்தக் கடனை தற்போது இந்த பரிசுத் தொகையை வைத்து அடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார் குமரேசன்.
நமக்கும் இப்படி பிரைஸ் அடிக்க மாட்டேங்குதே.. சொக்கா...!
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்
                                                                            மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
                                                                            SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
                                                                            தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
                                                                            கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
                                                                            அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
                                                                            சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
                                                                            கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
                                                                            'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
{{comments.comment}}