இந்திய கடற்படைக்கு.. 26 ரபேல் போர் விமானங்கள்.. மத்திய அரசு முடிவு

Jul 13, 2023,03:51 PM IST
டெல்லி: இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வழங்கியது. இந்த 26 ரபேல் போர் விமானங்களும் பிரான்சிடமிருந்து வாங்கப்படும். ரபேல் போர் விமானங்கள் கடற்படைக்கு ஏற்றாற்போலவும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் இந்த கொள்முதலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டில் 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர இந்தியாவில் 3 ஸ்கோர்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளங்களை அமைக்கும் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்