காபிக் கடையில் சண்டை.. கனடா நாட்டவரை குத்திக் கொன்ற இந்தியர்!

Mar 29, 2023,09:39 AM IST
வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் நடந்த ஒரு வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த இந்திய இளைஞர், கனடா நாட்டுக்காரரை குத்திக் கொன்று விட்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வான்கூவரில் உள்ள ஸ்டார்பக்ஸ் கபேக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் பெயர் இந்தர்தீப் சிங் கோசல். 37 வயதாகும் அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவரால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பால்ஸ்டான்லி ஸ்மித். இவருக்கும் 37 வயதுதான்.



ஸ்டார்பக்ஸ் கடைக்கு வெளியே இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் இது அடிதடியாக மாறியது.  இதில் படுகாயமடைந்த ஸ்மித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்மித்தின் தாயார் கேத்தி கூறுகையில், எனது மகன் தனது மனைவி, மகளுடன் கடைக்குப் போயிருந்தான். அவனுக்கு தனது மனைவி, குழந்தைதான் உலகமே.. அவர்களுக்காகத்தான் வாழ்ந்து வந்தான். அவனது கொலை மூலம் மொத்த வாழ்க்கையையும் கோசல் சீர்குலைத்து விட்டார் என்றார் வேதனையுடன்.

கோசலுக்கும், ஸ்மித்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்செயலானது என்றும், துரதிர்ஷ்டவசமாக இது கொலையில் போய் முடிந்து விட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்