காபிக் கடையில் சண்டை.. கனடா நாட்டவரை குத்திக் கொன்ற இந்தியர்!

Mar 29, 2023,09:39 AM IST
வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் நடந்த ஒரு வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த இந்திய இளைஞர், கனடா நாட்டுக்காரரை குத்திக் கொன்று விட்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வான்கூவரில் உள்ள ஸ்டார்பக்ஸ் கபேக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் பெயர் இந்தர்தீப் சிங் கோசல். 37 வயதாகும் அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவரால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பால்ஸ்டான்லி ஸ்மித். இவருக்கும் 37 வயதுதான்.



ஸ்டார்பக்ஸ் கடைக்கு வெளியே இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் இது அடிதடியாக மாறியது.  இதில் படுகாயமடைந்த ஸ்மித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்மித்தின் தாயார் கேத்தி கூறுகையில், எனது மகன் தனது மனைவி, மகளுடன் கடைக்குப் போயிருந்தான். அவனுக்கு தனது மனைவி, குழந்தைதான் உலகமே.. அவர்களுக்காகத்தான் வாழ்ந்து வந்தான். அவனது கொலை மூலம் மொத்த வாழ்க்கையையும் கோசல் சீர்குலைத்து விட்டார் என்றார் வேதனையுடன்.

கோசலுக்கும், ஸ்மித்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்செயலானது என்றும், துரதிர்ஷ்டவசமாக இது கொலையில் போய் முடிந்து விட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்