காபிக் கடையில் சண்டை.. கனடா நாட்டவரை குத்திக் கொன்ற இந்தியர்!

Mar 29, 2023,09:39 AM IST
வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் நடந்த ஒரு வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த இந்திய இளைஞர், கனடா நாட்டுக்காரரை குத்திக் கொன்று விட்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வான்கூவரில் உள்ள ஸ்டார்பக்ஸ் கபேக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் பெயர் இந்தர்தீப் சிங் கோசல். 37 வயதாகும் அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவரால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பால்ஸ்டான்லி ஸ்மித். இவருக்கும் 37 வயதுதான்.



ஸ்டார்பக்ஸ் கடைக்கு வெளியே இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் இது அடிதடியாக மாறியது.  இதில் படுகாயமடைந்த ஸ்மித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்மித்தின் தாயார் கேத்தி கூறுகையில், எனது மகன் தனது மனைவி, மகளுடன் கடைக்குப் போயிருந்தான். அவனுக்கு தனது மனைவி, குழந்தைதான் உலகமே.. அவர்களுக்காகத்தான் வாழ்ந்து வந்தான். அவனது கொலை மூலம் மொத்த வாழ்க்கையையும் கோசல் சீர்குலைத்து விட்டார் என்றார் வேதனையுடன்.

கோசலுக்கும், ஸ்மித்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்செயலானது என்றும், துரதிர்ஷ்டவசமாக இது கொலையில் போய் முடிந்து விட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்