சென்னை: இந்திய ரயில்வே குரூப் டி பிரிவில் 32,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆள்சேர்ப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் மூலம் ஒவ்வொரு வருடமும் நிரப்பபட்டு வருகிறது. இந்த காலி பணியிடங்களின் அறிவிப்பிற்காக இளைஞர்கள் பலரும் எதிர்பார்த்து வருவது வழக்கம். ஏனெனில் ரயில்வே துறையில் பணிபுரிவது என்பது பலரின் கனவாகவும் ஏக்கமாகவும் இருந்து வருகிறது. அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டு ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியம், குரூப் டி பிரிவில் 32 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் ரயில்வே குரூப் டி பிரிவில் மொத்தம் 32,000 காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 2700 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்காக ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.
இந்த குரூப் டி பிரிவிற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இருப்பினும் 12th, ITI , diploma,
Engineering முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 36 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு வயது 18 முதல் 39 வரை இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதாவது 18 முதல் 41 வயது வரை இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். மேலும் தகுதியுடையவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}