சென்னை: இந்திய ரயில்வே குரூப் டி பிரிவில் 32,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆள்சேர்ப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் மூலம் ஒவ்வொரு வருடமும் நிரப்பபட்டு வருகிறது. இந்த காலி பணியிடங்களின் அறிவிப்பிற்காக இளைஞர்கள் பலரும் எதிர்பார்த்து வருவது வழக்கம். ஏனெனில் ரயில்வே துறையில் பணிபுரிவது என்பது பலரின் கனவாகவும் ஏக்கமாகவும் இருந்து வருகிறது. அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டு ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியம், குரூப் டி பிரிவில் 32 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் ரயில்வே குரூப் டி பிரிவில் மொத்தம் 32,000 காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 2700 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்காக ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.
இந்த குரூப் டி பிரிவிற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இருப்பினும் 12th, ITI , diploma,
Engineering முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 36 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு வயது 18 முதல் 39 வரை இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதாவது 18 முதல் 41 வயது வரை இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். மேலும் தகுதியுடையவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
{{comments.comment}}