வாஷிங்டன்: அமெரிக்காவில் கிஷன் குமார் சிங் என்ற இந்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.
78 வயதான பெண்ணிடம் சட்ட அமலாக்க அதிகாரி போல் நடித்து மோசடி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 21 வயதான கிஷன் குமார் சிங், வடக்கு கரோலினாவில் உள்ள கில்ஃபோர்ட் கவுண்டியில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கி கணக்குகள் ஆபத்தில் இருப்பதாக கூறி, பணத்தை எடுக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார் கிஷன் குமார் சிங். பாதுகாப்பாக வைப்பதற்காக, பணத்தை எடுக்க சொன்னதாக கில்ஃபோர்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்க வந்தபோது அவரை அதிகாரிகள் மடக்கிக் கைது செய்துள்ளனர்.

அவர் தற்போது கில்ஃபோர்ட் கவுண்டி தடுப்பு மையத்தில் $1 மில்லியன் பிணைத்தொகையுடன் கிஷன் குமார் சிங் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மோசடி முயற்சி மற்றும் முதியோரை ஏமாற்றியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கில்ஃபோர்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோசடி செய்பவர்கள் முதியோர் இல்லங்கள் மற்றும் உதவி பெறும் இல்லங்களில் உள்ளவர்களை குறிவைத்து, சட்ட அமலாக்க அதிகாரிகள் போல் நடித்து பணம் கேட்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு போன் செய்து பணம் கேட்க மாட்டோம். உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துள்ளது.
சிங் 2024 முதல் ஓஹியோவின் சின்சினாட்டி அருகே மாணவர் விசா மூலம் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}