டெல்லி: கம்போடியா - தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கம்போடியாவில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து படைகளுக்கு இடையே ராணுவ மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிந்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பெருமளவிலான மக்கள் தாக்குதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்திய குடிமக்கள் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நடந்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர உதவி தேவைப்பட்டால், இந்தியர்கள் புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரகத்தை +855 92881676 என்ற எண்ணிலோ அல்லது cons.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.
தாய்லாந்தும் கம்போடியாவும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பாக மோதலில் இறங்கியுள்ளன. இது ராணுவ மோதலாக தற்போது மாறியுள்து.
இதற்கிடையில், பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகமும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாய்லாந்தில் உள்ள இந்தியப் பயணிகளுக்கு ஏழு எல்லை மாகாணங்களான உபோன் ரட்சதனி (Ubon Ratchathani), சூரின் (Surin), சிசகெட் (Sisaket), புரி ராம் (Buriram), சா கியோ (Sa Kaeo), சந்தபுரி (Chanthaburi) மற்றும் டிராட் (Trat) ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய குடிமக்கள், தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் (Tourism Authority of Thailand - TAT) செய்தி அறை உட்பட, நம்பகமான ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவதையோ அல்லது அதன்படி செயல்படுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத்தலங்களில் தாய்லாந்தும் முக்கியமான இடத்தில் உள்ளது. குறிப்பாக பாங்காங் செல்வது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். 15 க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களிலிருந்து வாரத்திற்கு 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாய்லாந்துக்கு இயக்கப்படுகின்றன. தற்போது கம்போடியா - தாய்லாந்து இடையிலான மோதல் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக பாதிக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}