தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

Jul 26, 2025,05:13 PM IST

டெல்லி: கம்போடியா - தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கம்போடியாவில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.


கம்போடியா மற்றும் தாய்லாந்து படைகளுக்கு இடையே ராணுவ மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிந்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பெருமளவிலான மக்கள் தாக்குதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்திய குடிமக்கள் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.


இதுதொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நடந்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர உதவி தேவைப்பட்டால், இந்தியர்கள் புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரகத்தை +855 92881676 என்ற எண்ணிலோ அல்லது cons.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.




தாய்லாந்தும் கம்போடியாவும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பாக மோதலில் இறங்கியுள்ளன. இது ராணுவ மோதலாக தற்போது மாறியுள்து. 


இதற்கிடையில், பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகமும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாய்லாந்தில் உள்ள இந்தியப் பயணிகளுக்கு ஏழு எல்லை மாகாணங்களான உபோன் ரட்சதனி (Ubon Ratchathani), சூரின் (Surin), சிசகெட் (Sisaket), புரி ராம் (Buriram), சா கியோ (Sa Kaeo), சந்தபுரி (Chanthaburi) மற்றும் டிராட் (Trat) ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


இந்திய குடிமக்கள், தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் (Tourism Authority of Thailand - TAT) செய்தி அறை உட்பட, நம்பகமான ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவதையோ அல்லது அதன்படி செயல்படுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.


இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத்தலங்களில் தாய்லாந்தும் முக்கியமான இடத்தில் உள்ளது. குறிப்பாக பாங்காங் செல்வது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். 15 க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களிலிருந்து வாரத்திற்கு 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாய்லாந்துக்கு இயக்கப்படுகின்றன.  தற்போது கம்போடியா - தாய்லாந்து இடையிலான மோதல் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக பாதிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்