ஃபிளைட்டை பறக்க விட்டுட்டு.. அரை மணி நேரம் தூக்கம் போட்ட பைலட்டுகள்.. ஊசலாடிய "153 உயிர்கள்"!

Mar 10, 2024,06:43 PM IST

ஜகார்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த படிக் ஏர் - Batik Air - விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றின் பைலட்டுகள், விமானத்தை பறக்க விட்டு விட்டு, அரை மணி நேரம் ஹாயாக தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்த பரபரப்பு தகவலை கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பைலட் தூங்கினால் கோ பைலட் விழித்திருக்க வேண்டும். கோ பைலட் தூங்குவதாக இருந்தால் பைலட் விழித்திருக்க வேண்டும். இதுதான் விதி. ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தூங்கியுள்ளனர். இதனால் விமானத்தில் இருந்த 153 பேரின் உயிரும் பெரும் ரிஸ்க்கில் இருந்துள்ளது. ஏதாவது ஒரு சிறு தவறு நடந்திருந்தாலும் கூட மிகப் பெரிய அசம்பாவிதத்தில் போய் அது முடிந்திருக்கும்.


சம்பந்தப்பட்ட விமானமானது, தென் கிழக்கு சுலவேசியிலிருந்து ஜகார்தாவுக்கு போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் இந்த தூக்க சம்பவம் அரங்கேறியுள்ளது.  நல்ல வேளையாக விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. 




இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட விமானிகள் இருவரும் நேரில் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளனர். அதேபோல படிக் ஏர் நிறுவனத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்களுக்கு போதிய ஓய்வளிப்பதை படிக் ஏர் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு பைலட்டும், கோ பைலட்டும் ஓடும் விமானத்தில் தூங்கியதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்

news

சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்

news

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!

news

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்