விஜய் சேதுபதியை உதைத்தால்.. எக்ஸ் தளத்தில் பதிவு போட்ட.. அர்ஜூன் சம்பத்துக்கு ரூ. 4000 அபராதம்!

Aug 09, 2024,05:56 PM IST

சென்னை:   நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு தருவதாக அறிவித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறு கருத்துக்களை பேசியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் ரொக்க பணம் பரிசாக அளிக்கப்படும் என பதிவிட்டிருந்தார்.


அர்ஜுன் சம்பத்தின் இந்த பதிவு தொடர்பாக கோவை கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் கே பி சாந்தி தாமாக முன்வந்து இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு கோவை குற்றவியல்  நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சந்தோஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நீதிபதி  சந்தோஷம், அர்ஜுன் சம்பத்துக்கு 4,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்