லண்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் மேலும் பல நிறுவனங்களின் இணையதளங்களும் டவுன் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ் ஆப்பும் கூட சரிவர பல பகுதிகளில் செயல்படவில்லை. இது சைபர் அட்டாக்காக இருக்கலாமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் எல்லோரும் முதலில் விழிப்பது செல்போனில்தான்.. அதிலும் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பார்க்காமல் பொழுது விடியாது.. முடியாது. இந்த நிலையில்தான் இன்று இரவு திடீரென பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவை டவுன் ஆகின. செயலிழந்தன. யாராலும் லாகின் செய்ய முடியவில்லை. வாட்ஸ் ஆப் பின்னர் சரியானது.
இந்த செயலிகள் மட்டுமல்லாமல் மேலும் பல இணையதளங்களும் ஒரு சேர டவுன் ஆனதால் தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சைபர் அட்டாக்காக இருக்கலாமோ என்ற சந்தேகம் கிளம்பியது.
ஒரே நேரத்தில் முன்னணி செயலிகள் செயலிழந்தது தற்செயலானதாக இருக்க முடியாது என்பது பலரின் கருத்தாகும். மெட்டா நிறுவனத்தின் புராடக்ட்தான் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் திரெட்ஸ் ஆகியவை. திரெட்ஸும் கூட டவுன் ஆகியது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கே நக்கலடிச்சுட்டாரு குமாரு!இந்த செயலிகள் செயலிழந்ததால் மொத்தப் பேரும் டிவிட்டருக்குத் தாவினர். யார் போனா என்ன எங்கண்ணன் எலான் மஸ்க் இருக்காருடா என்று பலரும் மீம்ஸ் போட்டு பேஸ்புக்கையும், இன்ஸ்டாவையும் கலாய்த்தனர். மார்க் ஜக்கர்பர்க் வயர்களை நோண்டி சர்வரை சரி செய்வது போன்ற மீம்ஸ்களும் தூள் பறந்தன.
அதை விட காமெடி, எலான் மஸ்க்கே வந்து கிண்டலடித்து டிவீட் போடும் நிலைமைக்குப் போனதுதான். இந்த டிவீட்டை நீங்க படிக்கக் காரணம், எங்க சர்வர்கள் சரியா வேலை செய்வதால்தான் என்று கலாய்த்துள்ளார் மஸ்க். அதேபோல இன்னொரு மீம்ஸையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
இப்பவாச்சும் கொஞ்சம் போனுக்கு ரெஸ்ட் கொடுங்கடா என்று பல இடங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டியதையும் பார்க்க முடிந்தது. ஆக மொத்தம் இன்ஸ்டா, பேஸ்புக் இல்லாமல் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயனாளர்கள் ஆடிப் போய் விட்டனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}