- மது.ரேணுகா ராயன்
நெஞ்சக்கனல் கொண்டு
மதுரையை எரித்த கண்ணகியும்..,
கணவன் காணாத பேரழகை
பேயுருவால் அழித்தாண்ட- புனிதவதியும்.,
தமிழும் சைவமும் தன் வாழ்வு என்று நங்கை பருவத்தை துறந்து
முதுமை வரம் பெற்ற ஔவையும்.,
கணவன் மாண்டபோதும் _ நம்
மண்ணைக் காக்க யுத்தக்களம்
வெற்றி கொண்ட
வேலு நாச்சியும்...,

விடுதலை இந்தியாவை
நாம் காண நேதாஜி ராணுவத்தில் இணைந்த லட்சுமிபாயும்..,
தமிழினப் பண்பை பறைசாற்றிய திருமகள்கள் - அவர் தம் வாரிசே
நம் தமிழ் பெண்ணினம்!
பெண்ணியம்... பேசி
சாதிக்கப் போவதில்லை இனி
வாழ்வும் வாக்குமாய் அதை நிலை நிறுத்த அறிவின் நீட்சியே போதும்.
கல்வியும், மேம்பட்ட பண்பும், ஒழுக்கமும், உண்மையும் அணிகலனாய் பெற்று
நம் பெண்ணினம் யுகம் பல ஆளட்டும்...!
யார் மனிதன்?
Short Story: கல்விக் கண்
Tamil Poem: தமிழில் பிறமொழிக் கலப்பு சரியா, தவறா???
An Extension, Not a Beginning.. 2வது இளவரசனை இப்படித்தான் வரவேற்றோம்!
National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
{{comments.comment}}