- மது.ரேணுகா ராயன்
நெஞ்சக்கனல் கொண்டு
மதுரையை எரித்த கண்ணகியும்..,
கணவன் காணாத பேரழகை
பேயுருவால் அழித்தாண்ட- புனிதவதியும்.,
தமிழும் சைவமும் தன் வாழ்வு என்று நங்கை பருவத்தை துறந்து
முதுமை வரம் பெற்ற ஔவையும்.,
கணவன் மாண்டபோதும் _ நம்
மண்ணைக் காக்க யுத்தக்களம்
வெற்றி கொண்ட
வேலு நாச்சியும்...,

விடுதலை இந்தியாவை
நாம் காண நேதாஜி ராணுவத்தில் இணைந்த லட்சுமிபாயும்..,
தமிழினப் பண்பை பறைசாற்றிய திருமகள்கள் - அவர் தம் வாரிசே
நம் தமிழ் பெண்ணினம்!
பெண்ணியம்... பேசி
சாதிக்கப் போவதில்லை இனி
வாழ்வும் வாக்குமாய் அதை நிலை நிறுத்த அறிவின் நீட்சியே போதும்.
கல்வியும், மேம்பட்ட பண்பும், ஒழுக்கமும், உண்மையும் அணிகலனாய் பெற்று
நம் பெண்ணினம் யுகம் பல ஆளட்டும்...!
Short Story: உதவியால் வந்த தொந்தரவு!
என் நினைவெனும் கோயிலில் நீதான் இருக்கிறாய்
எம்பெருமான் உருவாக்கிய தாமரைத் தடாகம்.. திருநாவுக்கரசர் வரலாறு.. 10!
Motivational Monday: நிச்சயத் தீர்ப்புகள்.. மௌனம் காவாதீர்; பதில் பகருங்கள்!
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
{{comments.comment}}