- மது.ரேணுகா ராயன்
நெஞ்சக்கனல் கொண்டு
மதுரையை எரித்த கண்ணகியும்..,
கணவன் காணாத பேரழகை
பேயுருவால் அழித்தாண்ட- புனிதவதியும்.,
தமிழும் சைவமும் தன் வாழ்வு என்று நங்கை பருவத்தை துறந்து
முதுமை வரம் பெற்ற ஔவையும்.,
கணவன் மாண்டபோதும் _ நம்
மண்ணைக் காக்க யுத்தக்களம்
வெற்றி கொண்ட
வேலு நாச்சியும்...,

விடுதலை இந்தியாவை
நாம் காண நேதாஜி ராணுவத்தில் இணைந்த லட்சுமிபாயும்..,
தமிழினப் பண்பை பறைசாற்றிய திருமகள்கள் - அவர் தம் வாரிசே
நம் தமிழ் பெண்ணினம்!
பெண்ணியம்... பேசி
சாதிக்கப் போவதில்லை இனி
வாழ்வும் வாக்குமாய் அதை நிலை நிறுத்த அறிவின் நீட்சியே போதும்.
கல்வியும், மேம்பட்ட பண்பும், ஒழுக்கமும், உண்மையும் அணிகலனாய் பெற்று
நம் பெண்ணினம் யுகம் பல ஆளட்டும்...!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Poem: அமுதென இனிக்கும் அன்புடை நாயகனே!
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தாயாக, தந்தையாக அரவணைத்தவரை மறந்த ஒரு மகனின் தேடல்
தந்தை எனும் ரத்தினம்
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இறைவன் அளித்த இணையற்ற அருட்கொடை
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
{{comments.comment}}