பாளையத்தம்மன் படம் போல.. உண்டியலில் விழுந்த ஐபோன்.. ரூ. 10,000க்கு ஏலத்தில் எடுத்த உரிமையாளர்.!

Jan 09, 2025,07:19 PM IST

சென்னை: சென்னை அருகே திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த தனது ஐ- போனை ரூபாய் 10 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளார் ஐ-போனின் உரிமையாளர் தினேஷ்.


சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் நிர்வாகப் பணியாளராக பணிபுரிந்து வரும் இவர் சமீபத்தில் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்த முயன்று போது, தவறுதலாக அவருடைய ஐபோனும் கூடவே விழுந்துள்ளது. இந்த ஐபோனின்  மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும்.


அவர் உடனடியாக இந்து  அறநிலையத்  துறைக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் தனது விலை உயர்ந்த செல்போனை மீட்டு தரும்படி கூறியிருந்தார். அதற்கு கோவில் நிர்வாகம் பாளையத்தம்மன் படத்தைப் போலவே, கோவில் உண்டியலில் விழுந்த பொருளோ பணமோ கடவுளுக்கு தான் சொந்தம் என கூறினார்கள். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 


தொடர்ந்து காணிக்கைகளை எண்ணுவதற்காக  உண்டியல்  திறக்கப்பட்டது. அப்போது செல்போனும் எடுக்கப்பட்டு அறநிலை துறை விதிகளின்படி செல்போன் ஏலத்தில் விடப்பட்டது.  ஏலத்தில் கலந்து கொண்ட தினேஷ், தனது போனை ரூ. 10,000க்கு ஏலத்தில் எடுத்து அதைத் திரும்பப் பெற்றார்.


திருப்போரூர் முருகன் கோவிலுக்குப் போயிருக்கீங்களா?




காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருப்போரூர் முருகன் கோவில் சென்னைக்கு அருகாமையில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் கந்தசாமி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். அதே போல் வள்ளி தெய்வானை தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ளனர். சுமார் 700 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் நடைபெறும் சஷ்டி விழா, தைப்பூசத் திருவிழா, வைகாசி விசாகம் போன்றவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் இத்தல முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் நினைத்தது நிறைவேறி விட்டால் பால்குடம், அலகு குத்துதல் போன்ற நேர்த்தி கடன்களை மக்கள் செலுத்துகின்றனர். இதனால் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்  கூட்டம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


முருக பக்தரான அருணகிரிநாதர் இங்கு வந்து முருக பெருமானை தரிசித்து திருப்புகழை பாடியிருக்கிறார் என்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அதேபோல் சிதம்பர சுவாமிகளும் இங்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றுள்ளார். பொதுவாக எல்லா கோயில்களிலும் கோபுரத்தை கடந்து சுவாமி சன்னதிக்கு எதிராகத்தான் கொடிமரம் அமைந்திருக்கும் ஆனால் திருப்போரூர் முருகன் கோவிலில் கோபுரத்திற்கு வெளியே அமைந்துள்ளது கொடிமரம்.


விக்ரம், வடிவேலு நடித்த கந்தசாமி படத்திலும் கூட திருப்போரூர் முருகன் கோவில் முக்கியமான பங்கு வகித்திருக்கும் என்பது நினைவிரு்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்