Chennai Super Kings.. 3 ரவி.. RRR.. டெர்ரர் காட்டும் சூப்பர் கிங்ஸ்.. 2 நம்ம பசங்க.. களை வந்துருச்சு

Nov 25, 2024,10:13 AM IST
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ வைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்பு அஸ்வின், முரளி விஜய், லட்சுமிபதி பாலாஜி, பத்ரிநாத் என பலர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் போகப் போக தமிழ்நாட்டு வீரர்கள் இல்லாத நிலைக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் போய் விட்டது. இது பல்வேறு வகையான சலசலப்புகளையும் கூட ஏற்படுத்தியது. அதேசமயம், இலங்கை வீரர்களுக்குக் கூட சென்னை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதால் அது சர்ச்சையாகவும் மாறியது. நாம் தமிழர் கட்சி போராட்டம் எல்லாம் கூட நடத்தியது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டு வீரர்கள் இரண்டு பேருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழ்நாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நேற்று ஜெட்டாவில் நடந்த முதல் நாள் ஏலத்தின்போது இந்த இரு வீரர்களையும் சென்னை அணி வாங்கி விட்டது. இதில் அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கும், விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கும் ஏலம் எடுத்தது சென்னை அணி.

முதல் ஏலத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:



ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்) (ரூ. 18 கோடி), எம்எஸ் தோனி (ரூ. 4 கோடி), மதீஷா பதிரதனா (ரூ. 13 கோடி), சிவம் துபே (ரூ. 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ. 18 கோடி), டேவன் கான்வே (ரூ. 6.25 கோடி) , ராகுல் திரிபாதி (ரூ. 3.40 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ. 4 கோடி), ஆர். அஸ்வின் (ரூ. 9.75 கோடி), கலீல் அகமது (ரூ. 4.80 கோடி), நூர் அகமது (ரூ. 10 கோடி),  விஜய் சங்கர் (ரூ.1. 20 கோடி).

இதில் நேற்று ஏலம் எடுக்கப்பட்டவர்களில் காஸ்ட்லியான விலைக்கு வாங்கப்பட்டவர் நூர் அகமது. அவரை ரூ. 10 கோடிக்கு எடுத்துள்ளனர். அடுத்து அஸ்வின், அவர் ரூ. 9.ச75 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். மூன்றாவது இடம் கான்வேக்கு, அவரை ரூ. 6.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர்.

சென்னை அணியிடம் தற்போது ரூ. 15.6 கோடி மீதம் உள்ளது. ஆர்டிஎம் கார்டு கைவசம் இல்லை. வீரர்கள் காலியிடம் 13 ஆக உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் காலியிடம் 4 ஆக உள்ளது.

RRR வீரர்கள்.. குஷியில் ரசிகர்கள்



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா என்று ரவி என்ற பெயர் கொண்ட 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதை வைத்து RRR என்று போட்டு புளகாங்கிதம் அடைந்துள்ளது சென்னை அணி. ரசிகர்களுக்கும் அதே குஷிதான்.

இந்திய அணியில் மிகச் சிறந்த பவுலர்களாகவும், ஆல் ரவுண்டர்களாகவும் மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களாகவும் வலம் வருபவர்கள் அஸ்வினும், ஜடேஜாவும். இந்த ஜோடி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை அணியில் இணைந்து விளையாடவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆக மொத்தம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாள் ஏலத்திற்குப் பிறகு பெரிய அளவில் ஏமாற்றம் தராத வகையில் நல்ல வீரர்களை எடுத்துள்ளது. இன்று யாரையெல்லாம் எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

news

பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்