IPL 2025 Finals.. அனல்பறக்கும் அகமதாபாத்.. கோப்பைக்கனவை நனவாக்கப் போவது யார்?.. முதலில் RCB பேட்டிங்

Jun 03, 2025,07:32 PM IST
அகமதாபாத்: 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் மோதும் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்றியதில்லை. இதனால் இரு அணிகளின் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்று யார் கோப்பையை வென்றாலும் அது புதிய சாதனையாக இருக்கும்.



பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையுடன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார். அதாவது 3 அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்த முதல் கேப்டன் என்ற பெருமைதான் அது. முதலில் டெல்லி கேப்பிடல்ஸையும், பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் அவர்  இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளாார். இதில் கொல்கத்தா பட்டம் வென்றுள்ளது. இப்போது அதே பெருமையை பஞ்சாப் அணிக்கும் ஐயர் தேடிக் கொடுப்பாரா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. எள் விழுந்தால் எண்ணையாகி விடும் என்று சொல்லும் அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்