IPL 2025.. மார்ச் 22 முதல் அதிரடி ஐபிஎல் திருவிழா.. 23ம் தேதி சென்னையின் முதல் போர்.. மும்பையுடன்!

Feb 16, 2025,06:28 PM IST

சென்னை: 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸுடன் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.


2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22ம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது. தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டி நடைபெறும். முதல் போட்டியில்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் சந்திக்கவுள்ளன.


சென்னையைப் பொறுத்தவரை முதல் போட்டி மார்ச் 23ம் தேதி நடைபெறும். முதல் போட்டியிலேயே பரம வைரியான மும்பை இந்தியன்ஸை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்ளவுள்ள சுற்றுப் போட்டிகள் விவரம்:




மார்ச் 23  - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை)

மார்ச் 28  - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ((சென்னை)

மார்ச் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ்  - ராஜஸ்தான் ராயல்ஸ் (குவஹாத்தி)

ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ்  -டெல்லி கேப்பிடல்ஸ் (சென்னை)

ஏப்ரல் 8 - சென்னை சூப்பர் கிங்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் (முல்லான்பூர்)

ஏப்ரல் 11 - சென்னை சூப்பர் கிங்ஸ்  -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)

ஏப்ரல் 14 - சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (லக்னோ)

ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ்  - மும்பை இந்தியன்ஸ் (மும்பை)

ஏப்ரல் 25 - சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (சென்னை)

ஏப்ரல் 30 -  சென்னை சூப்பர் கிங்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் (சென்னை)

மே 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பெங்களூரு)

மே 7 - சென்னை சூப்பர் கிங்ஸ்  - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா)

மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ்  - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)

மே 18 - சென்னை சூப்பர் கிங்ஸ்  -குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்)


மே 18ம் தேதியுடன் சுற்றுப் போட்டிகள் முடிவடையும். மே் 20ம் தேதி குவாலிபயர் 1 போட்டி ஹைதராபாத்தில் நடைபெறும். எலிமினேட்டர் போட்டி அதே ஹைதராபாத்தில், மே 23ம் தேதி நடைபெறும்.  குவாலிபயர் 2 போட்டியும், இறுதிப் போட்டியும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன. குவாலிபயர் 2 போட்டி மே 23ம் தேதியும், இறுதிப் போட்டி 25ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை சாம்பியன்கள்




2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 சாம்பியன்கள் உருவாகியுள்ளனர். அதிகபட்சமாக  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 பட்டங்களை வென்றுள்ளன. இதற்கு அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை சாம்பியனாகியுள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன. நடப்புச் சாம்பியனாக இருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகும்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரன்னர் அப் ஆகியுள்ளது. இந்த முறை சாம்பியன் ஆகப் போகும் அணி என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியும் விளையாடுகிறார் என்பதால் ஐபிஎல் தொடர் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

news

2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

news

பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

news

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

news

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு

news

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"

அதிகம் பார்க்கும் செய்திகள்