பாகிஸ்தான் பக்கம் திரும்பிய ஈரான்.. தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல்.. பரபரப்பு

Jan 17, 2024,06:36 PM IST

டெஹரான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஈரான் ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஜெய்ஷ் அல் அதில் என்ற தீவிரவாத அமைப்பின் 2 முகாம்களை தாக்கி அழித்ததாக ஈரான் கூறியுள்ளது. ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இந்த் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. 


ஈராக், சிரியாவில் இஸ்ரேலிய நிலைகளைக் குறி வைத்து ஈரான் தாக்கிய அடுத்த நாளே பாகிஸ்தான் பக்கம் அது திரும்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் செயலால் பிராந்தியத்தின் அமைதிச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.




பாகிஸ்தான் - ஈரான் எல்லைப் பகுதியில், ஜெய்ஷ் அல் அதில் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அடிக்கடி ஈரான் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால்தான் அவர்களின் நிலைகளைத் தாக்கி அழித்துள்ளது ஈரான்.


இந்தத் தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் மாகாண தகவல் துறை அமைச்சர் ஜான் அச்சகாஸி கூறுகையில், இதற்கு நிச்சயம் பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்புப் பிரிவு இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.


அதேசமயம், ஈரான் சர்வதேச விதிமுறைகளை, சட்டங்களை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டித்தக்கத்கது.  இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஈரான் வெளியுறவுத்துறை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்