டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர்களில் பயணித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 3 ஹெலிகாப்டர்களில் அவர்கள் சென்றனர். அப்போது கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சிகான் என்ற இடத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய நிலையில் இன்னொரு ஹெலிகாப்டர் வேகமாக கீழே வந்து மோதி விட்டதாக கூறப்படுகிறது.
அந்த ஹெலிகாப்டரில் யார் இருந்தார்கள், அதிபர் இருந்தாரா, அவருடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரியவில்லை. அதிபர் இப்ராகிம் அதில்தான் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு செம்பிறை மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு அஜர்பைஜான் மாகாண .துணை ஆளுநர் அலி ஜகாரி கூறுகையில், இதுகுறித்த முழுவிவரம் என்னிடம் இல்லை. 3 ஹெலிகாப்டர்களில் இரண்டு பத்திரமாக தரையிறங்கிய நிலையில் 3வது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு நான் செல்லவுள்ளேன் என்றார்.
ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இஸ்ரேலுடன் கடுமையான மோதல் போக்கில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது அது ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}