டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர்களில் பயணித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 3 ஹெலிகாப்டர்களில் அவர்கள் சென்றனர். அப்போது கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சிகான் என்ற இடத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய நிலையில் இன்னொரு ஹெலிகாப்டர் வேகமாக கீழே வந்து மோதி விட்டதாக கூறப்படுகிறது.

அந்த ஹெலிகாப்டரில் யார் இருந்தார்கள், அதிபர் இருந்தாரா, அவருடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரியவில்லை. அதிபர் இப்ராகிம் அதில்தான் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு செம்பிறை மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு அஜர்பைஜான் மாகாண .துணை ஆளுநர் அலி ஜகாரி கூறுகையில், இதுகுறித்த முழுவிவரம் என்னிடம் இல்லை. 3 ஹெலிகாப்டர்களில் இரண்டு பத்திரமாக தரையிறங்கிய நிலையில் 3வது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு நான் செல்லவுள்ளேன் என்றார்.
ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இஸ்ரேலுடன் கடுமையான மோதல் போக்கில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது அது ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}