ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்... விபத்துக்குள்ளானது.. மீட்புப் படைகள் விரைந்தன!

May 19, 2024,07:18 PM IST

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர்களில் பயணித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 3 ஹெலிகாப்டர்களில் அவர்கள் சென்றனர். அப்போது கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சிகான் என்ற இடத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய நிலையில் இன்னொரு ஹெலிகாப்டர் வேகமாக கீழே வந்து மோதி விட்டதாக கூறப்படுகிறது. 




அந்த ஹெலிகாப்டரில் யார் இருந்தார்கள், அதிபர் இருந்தாரா, அவருடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரியவில்லை. அதிபர் இப்ராகிம் அதில்தான் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு செம்பிறை மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.


இதுகுறித்து கிழக்கு அஜர்பைஜான் மாகாண .துணை ஆளுநர் அலி ஜகாரி கூறுகையில், இதுகுறித்த முழுவிவரம் என்னிடம் இல்லை. 3 ஹெலிகாப்டர்களில் இரண்டு பத்திரமாக தரையிறங்கிய நிலையில் 3வது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு நான் செல்லவுள்ளேன் என்றார்.


ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இஸ்ரேலுடன் கடுமையான மோதல் போக்கில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது அது ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்