டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், எங்களுக்காக பாகிஸ்தான், இஸ்ரேல் மீது அணு குண்டு வீசும் என்று ஈரான் ராணுவ தளபதி ஒருவர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி வைத்த நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது. இரு தரப்பும் ஏவுகணைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளன. இதில் ஏராளமான உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் ஈரான் - இஸ்ரேல் போரில் பாகிஸ்தானும் ரகசியமான சில வேலைகளில் இறங்கியுள்ளதாக ஈரான் ராணுவ தளபதிகளில் ஒருவரான மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார். ஈரானிய அரசின் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஜெனரல் மொஹ்சென் ரெஸாயியின் கூறுகையில், இஸ்ரேல் ஈரானின் மீது அணுகுண்டை ஏவினால், பதிலுக்கு அணு ஆயுதத்தால் இஸ்ரேலைத் தாக்கிப் பழிவாங்குவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதியளித்துள்ளது.
ஈரானுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்போம். முஸ்லிம் உலகம் ஒன்றுபட வேண்டும் என்று பாகிஸ்தான் சூளுரைத்துள்ளது. எங்களிடம் இதுவரை நாங்கள் வெளிப்படுத்தாத திறன்கள் உள்ளன. அவற்றை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்றார் அவர்.
பாகிஸ்தானின் இந்த உத்தரவாதத்தை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக கேம் ஆட பாகிஸ்தான் முனைவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தான் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு விதத்திலும் ஈரானுக்குத் துணையாக நிற்போம்; ஈரானிய நலன்களைப் பாதுகாப்போம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
உலக அளவில் 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் இஸ்ரேலும், ஈரானும் உள்ளடக்கம். பாகிஸ்தானிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
பிக் பாஸ் தமிழ் .. சீசன் 9.. அக்டோபர் 5ம் தேதி முதல்.. வீடுகள் தோறும் இனி கலகலதான்!
SIR திட்டத்தையே மொத்தமாக ரத்து செய்ய நேரிடும்.. சுப்ரீம் கோர்ட் திடீர் எச்சரிக்கை
வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. தேதி நீட்டிப்பு கிடையாது.. ஐடி துறை அறிவிப்பு
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
உயிரின் சிரிப்பு
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
{{comments.comment}}